Monday 11 January 2021

இது ஒரு வெற்றிக் கதை!

                                     

மேலே நாம் பார்ப்பது ஒரு சிறிய பறவை இனம். நமக்குத் தெரிந்த சிட்டுக்குருவியை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும்.

அது தான் Barn Swallow என்று அழைக்கப்படும் பறைவை இனம்.

எல்லாமே குருவிகள் தானே என்று அலட்சியப் படுத்த வேண்டாம். அது செய்யும் சாதனைகளைப் பார்த்தால் நிச்சயமாக சரணடைந்து விடுவோம்!

இது அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த ஒரு பறவை இனம். ஒவ்வொரு ஆண்டும் தனது இனப் பெருக்கதிற்காக இன்னொரு நாட்டிற்கு  - அதாவது கலிஃபோர்னியா நாட்டிற்குப் பறந்து செல்லுகிறது.

இப்படி அது பறந்து செல்லுகின்ற தூரம்  அதாவது நில மார்க்கமாகப் போகும் போது சுமார் 10,000 மைல்களைக் அது கடந்து செல்ல வேண்டும். அதனைத் தவிர்க்க அது கடல் மார்க்கத்தை தேர்ந்து எடுக்கிறது. அதாவது வெறுங்கடல் மட்டுமே - சுமார் 8300 மைல்கள் அது பயணம் செய்கிறது. கடல் மார்க்கம் என்று சொல்லும் போது எந்த நிலப்பரப்பும் அங்கு இல்லை. வெறுங்கடல் - வெறும் தண்ணீர் மட்டுமே!

அப்படி என்றால் ஓய்வு எடுப்பது எப்படி?  பசி எடுத்தால் எப்படி? என்று யாரும் அதற்குப் புத்தகம் போட்டு விளக்கவில்லை!  வாழ்த்துகள்! அந்தப் பறவை பயணம் செய்வதற்கு முன்பாக தனது வாயில் ஒரு சிறு குச்சியை வைத்துக் கொள்கிறது. பசி எடுக்கும் போது அந்தக் குச்சியை கடலில் போட்டு விடுகிறது. கனமில்லாத குச்சி என்பதால் அது மிதக்க ஆரம்பிக்கும் போது அதன் மேல் ஏறிக் கொண்டு பசிக்கு மீன்களைத் தேடுவதும் அப்படியே ஓய்வு எடுத்துக் கொள்வதும் அது இயல்பாகச்   செய்கிறது! மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் போது அந்தக்  குச்சியை வாயில் கவ்விக் கொள்கிறது! மீண்டும் பசிக்கத் தானே செய்யும்! மீண்டும் ஓய்வு எடுக்கத்தானே வேண்டும்!

இப்படித்தான் அந்தப் பறவை 8300 மைல்களை எந்தவிதப் பிரச்சனையுமில்லாமல் கடந்து செல்லுகிறது. கலிஃபோர்னியாவில். இரண்டு மாதங்கள் தங்கி  தனது வேலை முடிந்த பின்னர் தனது பிள்ளைக்குட்டிகளுடன் மீண்டும் 8300 மைல்கள் கடந்து தனது ஊரான அர்ஜெண்டினா வந்து சேருகிறது! 

ஆக மொத்தம் 16,600 மைல்கள் கடலிலேயே  பறந்து  தனது கடமைகளை எந்த முணுமுணுப்புமின்றி, எந்த காழ்ப்புணர்ச்சியுமின்றி  வெற்றிகரமாக செய்து முடித்து நாடு திரும்புகிறது!

ஒரு மனிதனால் இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி தான். இறைவன் அதற்குக் கொடுத்த வல்லமையை அது முழுமையாகப் பயன்படுத்துகிறது. மனிதன் எதற்கெடுத்தாலும் தடுமாற்றம், தயக்கம் - அடுக்கிக் கொண்டே போகலாம்!

நிச்சயமாக இது குருவி இனத்தின் வெற்றி கதை தான்!

No comments:

Post a Comment