Sunday 31 January 2021

பெண் கல்வியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!

 தமிழர்கள் தங்கள் பெண் பிள்ளைகளின் கல்விக்கு  முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்று கேட்க வேண்டிய நிலையில் தான் இன்றும் நாம்  இருக்கிறோம்.

இன்று தமிழ் இனத்தின் வாரிசு ஒன்று வெள்ளை மாளிகையில் துணை அதிபராக இருக்கின்ற இந்த காலகட்டத்திலும் இது போன்ற கேள்விகள் இருக்கக் கூடாது! ஆனால் இருக்கின்றது, என்ன செய்ய!

நமது நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.  இந்திய சமூகத்தில் தமிழர்களைத் தவிர மற்ற சமூகத்தினர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவே இருக்கின்றனர். மற்றும் சீன, மலாய்க்கார சமூகத்தில் பெரும்பாலான பெண்கள் கல்வி கற்றவர்கள்.

இன்று பெரிய பதவிகளில் இருக்கும் பெண்களில் பலர் சீன, மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கற்ற கல்வி அவர்களைச் சிம்மாசனத்தில் உட்கார  வைத்திருக்கிறது. 

நம் இன பெண்களிலும் பலர் நல்ல அந்தஸ்தான பதவிகளில் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களில் தமிழ்ப் பெண்கள் குறைவு என்று தான் சொல்ல வருகின்றேன்.

படித்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கின்றனர். இன்னும் கல்வி பெறாத கீழ் மட்டத்தில் பார்ப்போமானால்  அவர்களது முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை என்றே சொல்லலாம்.

பெற்றோர்களுக்கும் கல்வி எந்த அளவு முக்கியம் என்பதும்  இன்னும் புரிந்து கொள்ளவில்லை. சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட ஒன்று. மகள் இரண்டாம் பாரத்தில் படிக்கிறாள்.அப்பன் குடிகாரன். அவன் மகளை பள்ளிக்கூடம் போக வேண்டாம், வேலைக்குப் போ என்கிறான். அவன் வீட்டில் இன்னும் இரண்டு மகள்கள் பள்ளிக்கூடம் போகாமல் வேலைக்குப் போகிறார்கள். ஒரே மகன் குடிகாரன். அவனும் அரை குறை!

இப்படித்தான் பொறுப்பற்றத் தமிழன் பிள்ளைகளை வளர்க்கிறான். கல்வியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. பிள்ளைகளுக்கும் கல்வி கற்க வேண்டும் என்னும் உந்துதலும் இல்லை. இவர்களிடம் போய் "பிச்சை புகினும் கற்கை நன்றே!" என்று சொல்லி விளங்க வைக்கவா முடியும்!

ஆனால் எனக்குத் தெரிந்த பலர் மிகவும் மோசமான ஏழ்மை நிலையில் இருந்தாலும் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அவர்கள் குடும்பங்களில் கல்வி கற்று பட்டதாரியாக வேண்டும் என்கிற போட்டி  பிள்ளைகளிடம்  இருக்கிறது. சித்தப்பா வீட்டுப் பிள்ளை, பெரியப்பா வீட்டுப் பிள்ளை, மாமா வீட்டுப் பிள்ளை - இப்படி இந்த பிள்ளைகளிடையே ஒரு எடுத்துக்காட்டு  நிலவுகிறது. எடுத்துக்காட்டுகள் நம் குடும்பங்களிலே போட்டியை உருவாக்குகிறது.

எப்படியோ வருங்காலம் தமிழ் இனத்தில் பெண் பிள்ளைகளின் பங்கு கல்வியில் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். 

கல்வி ஒன்ற நம் சமுதாயத்தை உயர்த்தும்! கல்வி மூலம்  நமது தரத்தை உயர்த்துவோம்!

No comments:

Post a Comment