Sunday 31 January 2021

இது கொடுமை!


ஆயிரக்கணக்கான  கோழிகள் உஷ்ணம் தாங்காமல் இறந்து போயின!

வாயில்லா ஜீவன்கள் அவை. அப்படியே அவைகள் போக  வேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்திருந்தாலும் அங்கேயும் அவைகள் மக்களுக்குத் தீவனமாகத் தான் போய் சேர்ந்திருக்கும்!   

 ஆனாலும் இங்கு நடந்ததோ கொடுமை. கோழிகள் சிங்கப்பூருக்குப் போய்க் கொண்டிருந்த வேளையில், துவாஸ், சோதனைச் சாவடியில் ஏற்பட்ட தாமத்தினால் அவைகள் மடிந்தன.

ஒரு சில மணி நேரங்களில் போய்ச் சேர வேண்டிய பயணம் ஆனால் பாதி நாளாயிற்று. குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேர முடியவில்லை. ஏகப்பட்ட தாமதம். அதற்கு மேல் கோழிகளால்  உஷ்ணத்தைத் தாங்க முடியவில்லை. மேலும் கோழிகளை அடைத்து வைத்திருக்கும் பெட்டிகளில் அடியிலிருந்து மேல் வரை ஒவ்வொரு பெட்டியிலும் முடிந்தவரை அமுக்கி அமுக்கி வைத்தால் அந்த கோழிகளின் நிலை எப்படியிருக்கும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ளளாம்!

சாதாரண நாளிலேயே ஒன்றோ இரண்டோ செத்துத் தான் போகும். அதுவும் இந்த நிலையில் அவைகள் இப்படி ஆயிரக் கணக்கில்  செத்துப் போவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!  ஆனாலும் இவைகளையும் காசாக்கி விடுவார்கள் வியாபாரிகள்!

மனிதனின் உணவுக்காக எத்தனை எத்தனையோ உயிர்கள் ஒவ்வொரு நாளும் உலகெங்களிலும் பலியாகின்றன. மனிதனின் மகிழ்ச்சிக்காக - ருசிக்காக -  ஏகப்பட்ட உயிர்கள் பலியாக்கப்படுகின்றன.

உயிர்களைக் கொல்லாதே என்கிற சப்தம் ஒரு பக்கம்! ஐயோ! கொல்லாமல் நாங்கள் எப்படி உயிர் வாழ்வது என்கிற ஒலம் ஒரு பக்கம்!

கொடுமையிலும் கொடுமையடா சாமி!

No comments:

Post a Comment