கோவிட்-19 தொற்றைப் பற்றி எவ்வளவோ கிண்டலடிக்கலாம்!
ஆனால் நடப்பது என்னவோ கிண்டலாகத் தெரியவில்லை! இன்று மட்டும் அதன் எண்ணிக்கை பயமுறுத்துவதாகவே இருக்கிறது.
இன்றைய நிலமை (29-1-2021) = 5,725 பேர் பாதிப்பு மரணமடைந்தோர் எண்ணிக்கை = 16 பேர்
ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என்ன தான் நடக்கிறது என்பதும் புரியவில்லை.
ஒரு பக்கம் வயதானவர்கள் வீட்டிலேயே அடைந்து கொண்டு இருக்கிறார்கள். ஏதோ ஒரு மாதம், இரண்டு மாதம் என்றிருந்தால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் நிலைமை அப்படி இல்லை. எத்தனையோ மாதங்கள் வீட்டிலேயே அடைபட்டுக் கிடைக்க வேண்டியிருக்கிறது.
என்ன தான் சும்மா இருந்தாலும் அது சாதாரண விஷயம் அல்ல! சும்மா இருப்பது தான் மிகக் கஷ்டமான வேலை!
தினசரி பணிகளெல்லாம் பின் தங்குகின்றன. "இப்போ முடியும்! அப்போ முடியும்!" என்று ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது!
வயதாகிவிட்டால் வீட்டில் சும்மா முடங்கிக்கிடக்க முடியுமா? ஏதாவது செய்து கொண்டிருந்தால் தானே பொழுது போகும்! வயதாகிவிட்டவர்கள் ஓய்வு எடுக்கலாம். வயதாகாத வயதானவர்கள் என்ன செய்வது?
வழக்கம் போல அரசாங்கம் என்ன செய்கிறது என்று கேட்பது மிகவும் எளிதான விஷயம். என்ன செய்வது? யார் மீதாவது பழி போட வேண்டியிருக்கிறது! நாமே சட்டத்தை மீறுகிறோம்! அப்புறம் அரசாங்கத்தைக் குறை சொல்லுகிறோம்.
நாம் பழகுகிற சக மனிதர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை. எப்போதும் போல வெளியே போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்! அவர்களைக் குறை சொல்லவும் முடியவில்லை. எவ்வளவு நேரம் அடைந்து கிடப்பது என்கிறார்கள்!
இந்த எண்ணிக்கை இன்னும் கூடுமா என்றும் தெரியவில்லை! கூடும் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது!
எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தொற்று பரவிக் கொண்டிருக்கிறது! நாமும் செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கிறோம்!
என்ன செய்ய, சொல்லுங்கள்!
No comments:
Post a Comment