Thursday 14 January 2021

யார் பிரதமர் வேட்பாளர்?

 பொதுவாக முன்னாள் பிரதமர் டாக்டர் மாகாதிர் தனது அரசியல்  கருத்துகளை  தனக்கேற்றவாறு  மாற்றிக் கொண்டிருப்பவர்!

இன்றைய  நாட்டின் அரசியல்  சூழலுக்கு காரணகர்த்தா என்றால் அது டாக்டர் மகாதிர் தான். இப்போதும்  அது தனது தவறு தான் என்று இதுவரை அவர்  ஏற்றுக் கொள்ளவில்லை! அது தான் அவரின் பேச்சு சாமர்த்தியம்.

எப்போதும்  எதையாவது சொல்லி மக்களைக் குழப்பிக் கொண்டிருப்பவர்! "வயாதானவர் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்!" என்று சொல்லி  அவரைச்  சிறுமைப் படுத்த விரும்பவில்லை.  ஆனால் அவரின் வயதுகேற்ப அவர் நடந்து கொள்ளவில்லை என்பது தான் நமது ஆதங்கம்!

நாட்டில் நல்லதொரு சூழல் ஏற்பட்ட போது தனது பழிவாங்கும் குணத்தால்  நாட்டையே  தர்மசங்கடமான நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்!  யாரை சென்ற தேர்தலில் ஊழல்வாதிகள் என்று எதிர்த்தாரோ  அவர்கள் எல்லாம் இப்போது, இன்றைய ஆட்சியில்,  ஜம்மென்று  பதவியில் அமர்ந்து கொண்டு விட்டார்கள்! அன்றும் அவர்கள் கொள்ளைக்காரர்கள் தான் இன்றும் அவர்கள் கொள்ளைக்காரர்கள் தான்! சுடுகாடுமட்டும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்!

இப்போது புதிதாக ஒரு கதையைப் பின்னிக் கொண்டிருக்கிறார். 

பிரதமர் வேட்பாளராக வாரிசான் கட்சியின் தலைவர் ஷாஃபி அப்தாலே  சிறந்த பிரதமர்  வேட்பாளாராக இருக்க முடியும் என்பதாகக்கூறி வருகிறார்! அவரால் தான் மலாய் வாக்காளர்களைக் கவர முடியும் என்பதாகவும கூறி வருகிறார்!

அவர் கூறுவது போல்  ஷாஃபி சிறந்த பிரதமர் வேட்பாளராக இருக்கலாம்.  ஆனால் மேற்கு மலேசியாவில் உள்ளவர்கள், குறிப்பாக மலாய்க்காரர்கள், எந்த அளவுக்கு அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள்? என்கிற கேள்வியும் எழுகிறது.  மேற்கு மலேசியாவில் இல்லாத ஒருவரை பிரதமராக ஏற்கும் அளவுக்கு இங்குள்ளவர்கள் அப்படி ஒன்றும் அறிவுசார்ந்த பின்னணி உடையவர்கள் அல்ல!  தன்னை வைத்து மலாய் மக்களை அவர் எடை போடுகிறார்! 

டாக்டர் மகாதிர் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்!  மக்களைக் குழப்பலாம்!

உள்ளூரில் அன்வார் இப்ராகிமே இன்னும் சிறந்த பிரதமர் வேட்பாளராக மக்களின் மனதில் நிற்கிறார். அதை அவர் மறுப்பதன் மூலம் உண்மையைப் பொய்யாக்கும் வேலையைச் செய்கிறார். செய்யட்டும்!

இனி மேலும் அவர் சொல்லுவதை மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள் என்று இன்னும் அவர் நம்புகிறார்!  

எப்படியானாலும் அன்வாரே அடுத்த பிரதமருக்கான தகுதியைப் பெற்றிருக்கிறார் என்பதே நமது முடிவு!

No comments:

Post a Comment