Friday 8 January 2021

கொரோனாவின் கோரப்பிடியில் நாம்!

 கொரோனாவின் கோரப்பிடியில் நாம் சிக்கிக் கொண்டோமோ என்று நினக்கத் தோன்றுகிறது!

மிகவும் கேவலமான ஒரு சூழலை நமது அரசியல்வாதிகள் ஏற்படுத்தி விட்டார்கள்! ஆனால் அவர்கள் அது பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நாம் தான் கவலைப்பட வேண்டியுள்ளது.

அரசியல்வாதிகளுக்கு, எந்த சூழ்நிலையானாலும், எல்லா வசதிகளும் கிடைத்துவிடும். எல்லாம் இலவசமாகக் கிடைத்து விடுகின்றன.

ஆனால் சராசரி மலேசியனுக்கு அப்படி எளிதாக எதுவும் கிடைத்து விடுவதில்லை. வேலை செய்தால் தான் வயிற்றை நிரப்ப முடியும். அவன் வேலை செய்ய வேண்டும்.  சாப்பாடு வேண்டும். பிள்ளைகள் படிக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையைக் கவனிக்க வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு இந்த பிரச்சனை இல்லை. அன்றாட  அவலங்கள் இல்லை. அவர்களுடைய எல்லா  அவலங்களையும் நாம் ஏற்றுக்  கொண்டோம்.  அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ நாம் தான் ஏற்பாடுகள் செய்து கொடுத்தோம்!  இப்போது அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள். நாம் அவர்களுக்கு அடிமைகளாக வாழ்கிறோம்!

சமீபத்திய செய்தியின் படி. உலக அளவில் புள்ளி விபரங்களின் படி, கொரோனா தொற்று சீனாவை விட நாம் அதிகமான சம்பவங்களைக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் நமக்குக் கீழே இருக்கிறார்கள்! அதாவது நம்மை விட குறைவான சம்பவங்களைக் கொண்டிருக்கிறார்கள்!

கொரோனா தொற்று என்பது சீன நாட்டிலிருந்து வெளி உலகிற்குப்  பரப்பப்பட்டது என்பது நாம் அறிந்தது தான். ஆனால் அவர்கள் நாட்டில் நம்மை விட குறைவான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன! நாம் அதிகமாகக் கொண்டிருக்கிறோம் என்பது வியப்புக்குரியது!

இப்படி ஒரு சூழல் ஏற்படுவதற்குக் காரணம் அரசியல்வாதிகள்!  ஆனால் அவர்களுக்கு இன்னும் வெறி அடங்கவில்லை! அடுத்த பொதுத் தேர்தலை வையுங்கள் என்று அரசாங்கத்தை  நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்! அந்த அளவுக்கு மக்களின் நலன் அவர்களுக்குப் பெரிதாகப் படவில்லை.

அவர்களுக்குத் தேவையானவை எல்லாம் பதவி, பணம், பட்டம் - அது போதும்!  மக்கள் பிச்சை எடுக்க வேண்டும்! மிக உயர்ந்த எண்ணம்!

இப்போது இந்தத் தொற்று எல்ல மீறி விட்டது என்பது தான் உண்மை. உண்மையாகவே நாம் கொரோனாவின் பிடியில் சிக்கித்தான் கொண்டிருக்கிறோம்.  நம்மால் இன்னும் அதிலிருந்து விடுபட முடியவில்லை.  கொல்லைப்புற அர்சாங்கம் இன்னும் கொள்ளையடிப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது!

மக்கள் நலன் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கம் என்ன செய்யப் போகிறது? மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?  இன்னும் எதிலும் சரியான பதிலில்லை!

`மக்களை வழி நடத்த முடியாத அரசாங்கத்தை நாம் கொண்டிருக்கிறோம்!  நல்லதோ, கெட்டதோ அவர்கள் தான் மக்களுக்கு ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும்!

தீர்வு  கிடைக்கிறதோ இல்லையோ நமது கடமைகளைச் சரியாகச் செய்வோம்! அரசாங்கம் சொல்லுகின்ற அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம்.

வேறு வழி?

No comments:

Post a Comment