Friday 15 January 2021

திராவிடர் யார்?

 பொதுவாக நமது நாட்டில் திராவிடர் என்கிற சொல் எந்த அளவு பயன்படுத்தப்படுகிறது?

பெரும்பாலும் இல்லை என்று சொல்லலாம். அந்த சொல் இங்கு தேவைப்படவில்லை என்றும் சொல்லலாம். ஆனாலும் திராவிடம் என்கிற பெயரில் கட்சிகள், கழகங்கள் இருக்கின்றன. 

ஆனாலும் இந்த பெயரில் உள்ள கட்சிகளையோ, கழகங்களையோ நாம் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

இவைகள் சீர்திருத்த கட்சிகள் என்பது உண்மை தான்.  தமிழ் நாட்டில் பெரியார் ஈ.வே.ரா. கூட  தமிழர்களுக்குத் தான் சீர்திருத்ததை எழுதியும், பேசியும் வந்தவர். திராவிடர்களுக்கு அல்ல!  திராவிடர் என்று யாரும் இல்லை! அவரின் விடுதலை பத்திரிக்கைக் கூட தமிழில் தானே வெளி வருகிறது!

திராவிடர் என்கின்ற சொல் கூட தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களையும்  குறிக்கும். குறிப்பிட்ட எந்த ஒரு மாநில மக்களையும் அது  குறிக்கவில்லை. அவ்வளவு தான்!

தமிழ் நாட்டில் மட்டும் அந்த சொல் வலுக்கட்டாயமாக திணித்து  நடைமுறைக்குக்  கொண்டு வரப்பட்டது!

இருந்தாலும் அது பற்றியெல்லாம் இப்போது நாம் கவலைப்பட வேண்டாம்!  எங்கோ ஒரு பிழை நடந்துவிட்டது!

இப்போது நாம் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் நான் சொல்ல வருவது.

திராவிடக்கட்சிகளில் நாம் அங்கத்துவம் பெறக் கூடாது. அதனை வேண்டுமானால் தமிழர் கட்சிகளாக, கழகங்களாக இருந்துவிட்டுப் போகட்டுமே!  தமிழர்களுக்காகத் தானே அவர்கள் பாடுபடுகிறார்கள்? 

இத்தனை ஆண்டுகளாக நாம் எப்படி எப்படியோ ஆட்டு மந்தைகளாக இருந்து விட்டோம். இனி நாம் தமிழர்கள் என்கிற நமது அடையாளத்தை இழந்து விடக் கூடாது.

மற்ற மாநில  மக்கள் யாரும்  தங்களைத் திராவிடர் என்று சொல்லுவதில்லை.  நாமும் அவர்களையே பின் பற்றுவோம். அவர்கள் எப்படி தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ அதே போல நாம் தமிழர்கள். இதில் ஏதும் சிக்கல் இல்லை!

இனி முடிந்தவரை  நாம் தமிழர்கள் என அடையாளப் படுத்துவோம். நமது மொழி தமிழ் என அடையாளப் படுத்துவோம்.

உலகளவில் நாம் தமிழர்கள்! அந்த பெருமை நமக்கு இருக்கட்டும்!

No comments:

Post a Comment