Tuesday 19 January 2021

இலவச உணவு கொடுக்கும் உணவகம்!

 இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த கொரோனா தொற்று நோயின் தாக்கம்  பலரது  மனக்கதவை திறந்து விட்டிருக்கிறது!

    


பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் உணவகம் நடத்தும்  BIG BOSS BANANA LEAF RESTAURENT  உரிமையாளர்  எம். மோகனசுந்தரம் அந்த நல்ல காரியத்தைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார். வாழ்த்துகிறோம்!

தேவையான நேரத்தில் தேவையான உதவிகளைச் செய்வதில் மலேசியர்கள் யாரும் சளைத்தவர்கள் அல்ல. 

இன்றைய  நிலையில் பல உணவகங்கள் தங்களால்  இயன்றதைச் செய்து கொண்டு தான் இருக்கின்றன.

அதில் ஒருவர் தான்  மோகனசுந்தரம். ஜாலான் ஊய் கார் செங்கில் (Jalan Ooi Kar Seng)அமைந்திருக்கும்  அவரது உணவகத்திலிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 100  பேக்கெட்டுக்களில் சமைத்த உணவுகளைத் தேவையானவர்களுக்குக் கொடுத்து உதவுகிறார். 

அவரிடம்  பணி புரியும் பணியாளர்கள் - சுமார் 12 பேர் -  மாலை  மணி 3.00 லிருந்து 5.00 மணி வரை அதற்கான வேலைகளில் ஈடுபட்டு சுமார் 6.00 மணி அளவில் பசித்தோருக்கு வினியோகம் செய்ய ஆரம்பக்கிறார். 

 அது அவரது தினசரி பணி. இலவச உணவுக்காக ஒவ்வொரு நாளும் 10 கிலோ அரிசி, 100 முட்டைகள்,  100 மீன்கள், 100 கோழித்  துண்டுகள், மரக்கறிகள்  இவையனைத்தும் கொடுக்கப்படுகின்றன.

தினசரி நடக்கும் இந்த இலவசப் பணி பற்றி மோகனசுந்தரம் என்ன சொல்ல வருகிறார்?  "பணம் மட்டுமே எனக்குப் பிரதானம் அல்ல.  மனிதாபிமானம் என்பது முக்கியம். இப்போதும் பலர் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களின் நலனும் முக்கியம்".

மோகனசுந்தரம் வாழ்த்துக்குரியவர்.  "கொடுத்தே ஆண்டியானன்!"  என்று சொல்லுபவர்கள் உண்டு. இப்போது  அப்படி சொன்னவர்கள் ஒன்றும் கொடி கட்டி வாழவில்லை! உண்மை என்னவென்றால் கொடுப்பவர்கள் தான் தொழிலில் நீடிக்கிறார்கள். தொடர்ந்து வளமாக வாழ்ந்து  வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

கொடுப்பது நமது கடமை. அதனை எல்லாரும் செய்ய வேண்டும்!

No comments:

Post a Comment