Thursday 7 January 2021

இத்தனை ஆண்டுகள் என்ன செய்தீர்கள்?

 தமிழ் நாட்டில் தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை என்று படித்த போது அது ஓர் அதிர்ச்சி செய்தியாகத் தான் இருந்தது!

அப்படியென்றால் இத்தனை ஆண்டுகள் விடுமுறை இல்லையா என்று கேட்கத் தோன்றியதே தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை! இத்தனை ஆண்டுகள் ஏன் விடுமுறை கொடுக்கப்படவில்லை என்பது நமக்கும் புரியவில்லை!

கலைஞர் நீண்ட காலம் தமிழகத்தை ஆட்சி செய்தவர். தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம் என்று நாள் தவறாமல் பேசி வந்தவர். அவர் காலத்தில் கூட தைப்பூச விடுமுறை தேவையற்றதாக அவர் நினைத்திருக்கிறார் என்று அறியும் போது நமக்கு வருத்தத்தை  அளிக்கிறது.

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் தாய் வீடு என்றால் அது தமிழகம் தான். அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஆனால் தமிழகத்திற்கு வெளியே பல நாடுகளில் முருகப்பெருமானின் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் தைப்பூசம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

அதிலும் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பொது விடுமுறையும் உண்டு.  குறிப்பாக மலேசியாவில் நாடளவில் விடுமுறை இல்லையென்றாலும் இந்தியர்கள் அதிகம் வாழும்  மாநிலங்களில் பொது விடுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இப்படி வெளிநாடுகளிலேயே விடுமுறை என்கிற போது தமிழ் நாட்டில் இப்போது தான் பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருப்பது - பரவாயில்லை! - இப்போதாவது  ஒரு தமிழரான எடப்பாடியின் முலம் ஒரு விடிவு பிறந்திருக்கிறதே அதனை நினைத்து பெருமைப்படுவோம்! 

இத்தனை ஆண்டுகள் தமிழரின் பூமியில் ஆட்சி செய்தவர்கள் எந்த அக்கறையும் எடுக்கவில்லையே என்ன செய்தீர்கள் என்று கேட்கலாம் என்றாலும் அதற்கான பதிலையும் அவர்கள் வைத்திருப்பார்கள் என நம்பலாம்!

எடப்பாடியாரே! நன்றி! நன்றி!

No comments:

Post a Comment