Saturday 23 October 2021

வாழ்த்துகள் நண்பரே!


                               
                            GOPAL'S CORNER,  MARKET HALL, VICTORIA, LONDON

உணவகம் நடத்துவது என்பது சாதாரண காரியம் அல்ல, அதுவும் லண்டன் மாநகரில், அதுவும் வெற்றிகரமாக! அது மட்டும் அல்ல நமது மாமன்னர் தம்பதியர் அந்த உணவகத்தில் மதிய உணவை உட்கொண்டதும் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் பேறாகவே நாம் கருதலாம்!

மலேசிய இந்தியரான சுகன் கோபால் அந்த உணவகத்தை நடத்தி வருபவர். சுகன் பேராக் மாநிலத்தைச்  சேர்ந்தவர். இப்போது அவரது "Gopal's Corner"  லண்டனில் மலேசிய, சிங்கப்பூர் மக்களிடையே மிகவும்  பெயர் பெற்ற உணவகம். அவருடைய ரொட்டி சனாய் (பரோட்டா) கரி கப்பலா ஈக்கான் (மீன் தலை கரி)  இவைகளோடு நமது பாரம்பரிய தோசை இத்யாதிகளும் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

சமீபத்தில் நமது மாமன்னர் தம்பதியர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தனர். அப்போது - கடந்த 22.10.2021 அன்று - தங்களது மதிய உணவுக்காக கோபால்'ஸ் உணவகத்திற்கு திடீர் வருகை புரிந்தனர்! மாமன்னர் எப்போதுமே திடீர் திடீரென ஆச்சரியத்தை ஏற்படுத்துபவர் என்பது நமக்குத் தெரியும். அது போலவே அந்த உணவகத்திற்கும் சென்று அந்த மதிய வேளையில்  சுகனையும் அவரது குழுவினரையும்  மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்க வைத்தார்!

மாமன்னர் தம்பதியினர் அந்த உணவகத்திற்கு வருகை தந்த பின்னர் இப்போது இன்னும் பிரபலம் என்னும் நிலைமைக்கு அந்த உணவகம் விளங்குகிறது!

முதலில் நாம் சுகன் கோபாலுக்கு  நன்றி தெரிவிக்க வேண்டும். மலேசியாவில் உணவகம் நடத்துவதற்குப் பல சிக்கல்களை எதிர்நோக்கும் நமக்கு எங்கோ ஒரு நாட்டுக்குப் போய் அங்கே ஓர் உணவகத்தை வெற்றிகரமாக நடத்துவது என்பது மிகவும் சவலான விஷயம். அதனை அவர் வெற்றிகரமாகச் செய்கிறார்! வெற்றி தோல்வி அனைத்தும் நமது எண்ணங்களைப் பொறுத்தது! பல சோதனைகளைக் கடந்து தான் இன்று அவர் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார்!  வாழ்த்துகள் நண்பரே!

நீர் இன்னும் வாழ்க்கையில் உயர வாழ்த்துகிறேன்!                                      

No comments:

Post a Comment