Thursday 28 October 2021

புற்று நோயை ஏற்படுத்துமா?

 

நாம் தினசரி பயன்படுத்தும் பிஸ்கட்டுகள் இவை. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என்று ஏதோ ஒன்றை நமது வீடுகளில்  சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

சமீபத்திய செய்திகளின்படி இந்த பிஸ்கட்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் Glycidol & Acrylamide ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக  செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த அபாய எச்சரிக்கையை முதலில் விடுத்தது South China Morning Post என்னும் ஹாங்காங் நாளிதழ்! அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரும் உறுதிப்படுத்துகிறது.

நமது மலேசிய சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா அதனை மறுக்கவில்லை. ஆனால் அந்த ரசாயனங்கள் மிகச்சிறிய அளவிலேயே பயன்படுத்துப்படுவதாக  அவர் கூறுகிறார். அதனால் புற்றுநோய் அபாயம் என்பது பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என்று கூறுகிறார்! நாம் அவரை நம்புவோம்!

இந்த நேரத்தில் நாமும் ஒருசில ஆலோசனைகள் கூறலாம் என்றே நினைக்கிறேன். மலேசியாவில் தயாராகும் இந்த பிஸ்கட்டுகளில் ரசாயனம் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் மேல்நாடுகளில் தயாராகும் பிஸ்கட்டுகளில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவதில்லை என்பதும் உறுதியாகிறது. ஆக, மேல்நாடுகளில் ரசாயனம் கலக்காத பிஸ்கட்டுகள் தயாராகும் போது இங்கு நமக்கு மட்டும் ரசாயனம் ஏன் தேவைப்படுகிறது? தேவையில்லை என்பதே எனது கருத்து.

இந்தப் பிரச்சனையில் அரசாங்கம் தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். அந்த ரசாயனங்கள் மேல் நாடுகளில் தேவை இல்லை என்றால் இங்கு நம் நாட்டிலும் அந்த ரசாயனங்கள் தேவை இல்லை.

இந்த Cream Crackers பிஸ்கட் பற்றி ஒரு சின்ன செய்தி. தமிழ் நாட்டில் எனது நண்பர் ஒருவர்  வீட்டிற்குச் சென்றிருந்த போது அவர்கள் இந்த பிஸ்கட்டை தேநீரின் போது பயன்படுத்தினார்கள். எனக்கு ஆச்சரியம் தான். இது எப்படி இங்கே? என்று கேட்ட போது இந்த பிஸ்கட்டை அங்குள்ள மருந்தகங்களில் விற்கிறார்களாம். அதாவது இனிப்புநீர் வியாதிக்கு நல்லது என்று சொல்லி விற்கிறார்களாம்! 

கடைசியாக அரசாங்கத்திற்கு ஓர் அறிவுறுத்தல். புற்றுநோயை உருவாக்கும் என்று தெரிந்த பின்னர் அதனை ஏன் நாம் மடியில் வைத்துக் கொண்டு அழ வேண்டும்? தூக்கி எறிவது தான் சிறப்பு! நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நல்லது!


No comments:

Post a Comment