மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டது. நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தீடீரென நாடோடிகளாக மாறிவிட்டதால் சட்டமன்றத்தில் போதுமான பலமின்றி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இப்போது அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தேர்தல் நவம்பர் 20-தேதி என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தேர்தல் நடைபெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதனாலேயே இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தல்வரை இந்த மாநில கூட்டணி தொடர்ந்திருக்கலாம். ஆனால் அரசியல்வாதிகள் எந்த காரணத்திற்காக "ஓடுகிறார்கள்! ஒடியார்கிறார்கள்!" என்பது நமக்குத் தெரிய நியாயமில்லை. பொதுவாக நமக்குத் தெரிந்தெல்ல்லாம் இந்த கவிழ்ப்பில் பணம் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டும் தான்! அது தானே அரசியல்!
ஆனால் ஏற்கனவே நடந்த சபா மாநிலத்தில் நடந்த தேர்தலில் கோவிட்-19 தொற்றை நம்மால் இன்னும் மறக்க முடியவில்லை. அதன் பின்னர் தானே நமக்கு எல்லாக் கஷ்டங்களும் நஷ்டங்களும் நம்மைத் தேடிவர ஆரம்பித்தன! அதனைப் பயன்படுத்தித் தானே ஒருவரால் நீண்ட நாள் எதற்கும் உதவாத பிரதமராக இருக்க முடிந்தது! இந்த நாட்டின் பிரதமராக இருந்தவர்களில் "கரும்புள்ளி" என்றால் அது அவர் தானே!
மாநிலத் தேர்தல் வரும் முன்னரே 90 விழுக்காடு மக்கள் கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்கள் என்பது நல்ல செய்தி தான். ஆனால் எதனையும் முற்றும் முழுவதுமாக நம்பிவிட முடியாது என்பதும் எச்சரிக்கையாய் இருப்பதும் நமது கடமை. எதுவும் நடக்கலாம். ஆனானப்பட்ட அமெரிக்காவே கோவிட்-19 தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது!
அதனால் ஒரு சில கட்டுப்பாடுகள் நமக்கும் தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வாக்களிப்பவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பதே முதல் நிபந்தனையாக இருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் வாக்களிக்க முடியாது என்பதை முதலிலேயே அறிவித்துவிட வேண்டும். தடுப்பூசி போட்டதற்கான ஆதாரங்களை உடன் கொண்டுவர வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் கடமை.
தனிப்பட்ட மனிதர்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் தேவை. முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளி - முடிந்தவரை இதனை நாம் கடைப்பிடிப்பது பொது மக்களாகிய நமது கடமை.
மாநிலத் தேர்தல், நோய் பரவாமல் தடுப்பது, தேர்தல் ஆணையத்தின் கடமை!
No comments:
Post a Comment