இந்தோனேசியாவின் முதல் அதிபரான சுகர்னோவின் மூன்றாவது மகளான சுக்மாவதி சுகர்னோபுத்ரி இஸ்லாமிய மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மதம் மாறுகிறார்.
இந்த மத மாற்றத்திற்கான அதிகார பூர்வ சடங்குகள் அக்டோபர் மாதம் 26-ம் தேதி நடபெறுமன அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அழைப்பிதழ்கள் மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருக்கின்றன. கோவிட்-19 காலக்கட்டம் என்பதால் ஒரு சிலர் மட்டுமே வரவேற்கப்படுகின்றனர்.
அவருடைய மத மாற்றம் நடைபெறுகின்ற நாளும் அவருடைய 70 வது பிறந்த நாளும் ஒரே நாளில் வருவதும் குறிப்பிடத்தக்கது.
சுக்மாவதிக்கு இந்து மதம் என்பது புதிதல்ல. இவரது பாட்டி இந்து மதத்தைச் சேர்ந்தவர். பாலி தீவே இவர்களது பூர்வீகம். சுக்மாவதி இந்து மதத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்.
இது போன்ற சம்பவங்கள் இந்தோனேசியாவில் அடிக்கடி நடைபெறுகின்ற சம்பவங்கள் தான். அதிசயம் ஒன்றும் இல்லை. இந்த மத மாற்றத்தில் சம்பந்தப்பட்டவர் முன்னாள் அதிபர் சுகர்னோவின் புதல்வி என்பதால் இந்த செய்தி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தோனேசியா உலகிலேயே அதிக இஸ்லாமியர்களைக் கொண்ட ஒரு நாடு. மதமாற்றம் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அவர்களிடையே எந்தப் பிரச்சனையும் எழுவதில்லை.
நாமும் வரவேற்போம்!
No comments:
Post a Comment