Friday 22 October 2021

அங்கள்! என்னை உட்டுப் போறிங்களா!

 

தமிழ் நாடு,   நீலகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் இது.

ஒரே மாதமான குட்டி யானை ஒன்று வழி தடுமாறி அத்தோடு ஒரு குழியிலும் விழுந்து வெளியே வரமுடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த குட்டி யானையை வனத்துறையினர் காப்பாற்றி அதற்கு சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை முடிந்த பின்னர் அந்தக் குட்டியை தாயிடம் சேர்க்க வேண்டும். தாயைத் தேடி குட்டி யானையோடு வனத்துறையினர் அலையோ அலை என்று அலைந்து திரிந்தனர்.  

சுமார் ஏழு மணி நேர அலைச்சலுக்குப் பிறகு தாய் யானையைக் கண்டு பிடித்தனர். வனத்துறையினருக்கு மிக சந்தோஷம்.  குட்டியாருக்கு அம்மாவைப் பார்த்ததில் இன்னும் ரொம்ப சந்தோஷம்.

அம்மாவைப் பார்த்த சந்தோஷத்தில் குட்டி யானை "அங்கள்! என்னை விட்டுட்டு போறிங்களா! வேணாம்! வேணாம்!" என்று அவரை தனது தும்பிக்கையால் கட்டிப்பிடித்துக் கொண்டது!

என்ன செய்வது! கண்ணீரை வரவழைக்கும் காட்சி தான். வனத்துறையினருக்கு அவர்களின் கடமை முடிந்தது! தாயோடு அந்தக் குட்டியைச் சேர்ப்பது அவர்களின் கடமை!

               "கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ!                                                                            கடமை முடிந்தது கல்யாணம் ஆக!"

ஏனோ கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இந்தப் பாடல் எனது ஞாபத்திற்கு வருகிறது!


No comments:

Post a Comment