Monday 1 April 2019

கேள்வி - பதில் (96)

கேள்வி
வருகிற இந்தியத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைமை எப்படி இருக்கும்?

பதில்

பொதுவாக தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் நாம் தமிழர் கட்சிக்கு எந்த செல்வாக்கும் கிடைக்கக் கூடாது என்பதில் பலர் அக்கறை காட்டுகின்றனர். அவர்களில் அரசியல்வாதிகள் முன்னணியிலும் பத்திரிக்கை ஊடகங்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு எதிராகவும் இருக்கின்றனர்.  அவர்கள் எதிராக இருக்கக் காரணம் அவர்கள் தமிழர்கள் இல்லை. ஊடகங்களும் தமிழர்களால் நடத்தப்படவில்லை. தமிழர்கள் என்றாலே அச்சம் கொள்கின்றனர்!

நாம் தமிழர் கட்சி பொது மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லுவதில் இணையத் தளங்கள் தான் பெரும் பங்காற்றுகின்றன!  தமிழர்களுக்கு இந்த வழியை விட்டால் வேறு வழியில்லை. சொந்த நாட்டிலேயே அடிமைகளைப் போல வாழ வேண்டிய ஓரு சூழல் தமிழர்களுக்கு ஏற்பட்டுவிட்டது!

தேர்தலை எடுத்துக் கொண்டால் நாம் தமிழர் கட்சிக்கு  ஏற்ற  சூழல் இன்னும் உருவகவில்லை என்றே தோன்றுகிறது. 

நூறு விழுக்காடு  வாக்களிப்பு  வேண்டும் என்று ஆங்காங்கே விழிப்புணர்வை  பள்ளி மாணவர்கள் , பொது  இயக்கங்கள் மக்களுக்கு  ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.  அதே  சமயத்தில்  இலஞ்சம்  இல்லா  தேர்தல்  வேண்டும்  என்று  அவர்கள்  சொல்லவில்லை.  அப்படி   என்றால்  இலஞ்சத்தை  அவர்கள்  ஆதரிப்பதாகவே  எண்ணத்  தோன்றுகிறது!

இலஞ்சம் வேண்டும், நூறு விழுக்காடு வாக்களிப்பு  வேண்டும் என்பது   திராவிடக் கட்சிகளுக்கு  இலாபம்!

நாம் தமிழர் கட்சி  வெற்றி  பெற  ஒரே  வழி தான் உண்டு.  இலஞ்சம்  இல்லா தேர்தல் வேண்டும். அது ஒன்று போதும் அவர்கள் வெற்றி பெற. அவர்களுடைய வேட்பாளர்கள்  மிகத் தகுதி  வாய்ந்த  வேட்பாளர்கள்.  அவர்கள்  குண்டர் கும்பல்களின் தலைவர்கள் இல்லை!  மற்ற கட்சிகளை எடுத்துக்  கொண்டால்  ரௌடிகள்,  கொலைகாரர்கள்,     கொள்ளையடித்தவர்கள், ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவர்கள் தான் முன்னணியில் இருக்கின்றனர்!

இலஞ்சம் இல்லா தேர்தல் வரும் வரை நாம் தமிழர் கட்சி பொறுத்திருக்க  வேண்டும். அந்த நாள் வரும்.  

அது வரை காத்திருப்போம்!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       

No comments:

Post a Comment