கேள்வி
உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது சரி தானா?
பதில்
சரி தான். தனது மகனை நியமனம் செய்திருப்பது ஸ்டாலினின் உரிமை. ஒரு காலக் கட்டத்தில் கருணாநிதி இளைஞரணி செயலாளராக தனது மகனும். இன்றைய தலைவருமான ஸ்டாலினை நியமித்தார். அன்றும் அதனை யாரும் எதிர்க்கவில்லை! அதே போல இன்றும் இந்த நியமனத்தை யாரும் எதிர்க்கவில்லை!
எதிர்க்க என்ன இருக்கிறது? எதிர்ப்புக் குரல் எழுந்தால் அடுத்த நாளே எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் காணாமல் போய்விடுவார்! அது தான் அவர்களின் ஜனநாயகம்! அதனால் இருக்கிற ஜனநாயகத்தைக் காப்பாற்றிக் கொள்வது தான் சிறந்தது என்று அவை அடக்கமாக இருந்து விடுகிறார்கள்!
தளபதி ஏன் இந்த அவசரம் காட்டுகிறார்? காரணம் உண்டு. கருணாநிதி காலத்தில் அவரை எதிர்க்கச் சகோதரர் யாரும் இல்லை. இப்போது நிலைமை வேறு. தளபதிக்கு நேரடி எதிர்ப்பாளராக அஞ்சா நெஞ்சன் அழகரி இருக்கிறார்! இவர் எப்போது நெஞ்சை உயரத்துவார் என்று யாருக்கும் தெரியாது! அவரின் எதிர்ப்புக் குரல் வரும் முன்னேரே எல்லாவற்றையும் முடித்தாக வேண்டும் என்கிற அவசரத்தில் இருக்கிறார் தளபதி!
இது கட்சி பிரச்சனையாக இருந்தால் நாலு பேர் உட்கார்ந்து பேசி தீர்த்து விடலாம். இது கட்சி பிரச்சனையல்ல! அவர்களின் தந்தை விட்டுப் போன சொத்துப் பிரச்சனை. கோடிக்கணக்கில் சொத்து இருந்தால் எந்தத் தலைவனும் அந்தச் சொத்துக்களைக் கட்சிக்கு விட்டுவிட்டுப் போக மாட்டான்!
இதை இங்கேயே நமது ம.இ.கா.வினர் என்ன செய்தார்கள் என்பதைக் கொண்டே நாம் தெரிந்து கொள்ளலாம்! தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலத்தையே அப்படியே பாக்கெட்டுக்கள் திணித்துக் கொண்டார்களே! அது தான் தலைவனுக்கள்ள உள்ள இலட்சணம்! அப்படியிருக்க 2000 கோடி சொத்துக்களைக் கொண்ட கட்சி என்றால் எப்படியிருக்கும்? அந்த சொத்துக்களுக்காகத் தான் இப்போது மறைமுக தள்ளுமுல்லுகள்! அது போகப் போகத் தெரியவரும்! அஞ்சா நெஞ்சன் சும்மா இருக்க மாட்டர்! பாகப்பிரிவனை கேட்பார் அல்லவா!
ஆக, ஸ்டாலின் செய்தது சரி தான்! வருங்கால எதிர்ப்புக்களைச் சமாளிக்க இப்போதே மைந்தனுக்கு முடி சூட்டிவிட்டார்!
அனைத்தும் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது! போகட்டும்!
No comments:
Post a Comment