Wednesday 31 July 2019

ஏன் இந்த புலம்பல்..?

அன்வார் இப்ராகிம் அடுத்த பிரதமர் ஆவதை விரும்பாதவர்கள் இருக்கலாம். விரும்பாதவர்களில் பலர் அரசியல்வாதிகள்.   இவர்களில் பலர் அன்வாரின் முன்னாள் எதிர்ப்பாளர்கள். இவர்கள் மீண்டும் மீண்டும்  அன்வாருக்கு எதிராகவே பேசி வருகின்றனர்.

ஆனால் மக்கள்,  அன்வாரை ஆத்ரிக்கின்றனர்.  மக்கள் அமைதியானவர்கள்.  அவர்களின் குரல்  வெளியே  ஒலிப்பதில்லை.  ஆனால் அரசியல்வாதிகளின் குரல் வழக்கம் போல் பத்திரிக்கைகளில் பெரிதுப் படுத்தப்படுகின்றன! 

இந்த  எதிர்ப்பாளர்களின் குரலை நாம் அலட்சியப்படுத்தலாம்.  அல்லது ஒதுக்கிவிடலாம்.  ஆனால் இவர்கள் தொடர்ந்து குரல் எழுப்புவது என்பது மக்களை அவர்கள் தூண்டி விடுகிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. 

டாக்டர் மகாதிர் தொடர்ந்து  அவரின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி வருகிறார். அடுத்த பிரதமர் அன்வார் என்பதில் கருத்து வேறுபாடில்லை.  சமீபத்திய பேட்டி ஒன்றிலும் மீண்டும் அதனையே வலியுறுத்தியிருக்கிறர்.  இனி மேலும் அவர் அப்படித்தான் சொல்லுவார்.  ஒரே காரணம் தான். அவர் வயது அப்படி. இந்த வயதில், தனது 94-வது வயதில் அவர் கொடுத்த வாக்குறுதியை மீறுவது என்பது  மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியாது.  94 வயதில் ஒரு பொய்யராக, ஏமாற்றுக்காரராக அவரால் இருக்க ஒரு நாளும் முடியாது.  அரசியல்வாதிகளில் பெரும்பாலும் வயது வித்தியாசம் இன்றி பொய்யராகவும், உருட்டல் புரட்டல்வாதிகளாகவும் இருக்க முடிகிறது என்றால்  அவர்களின் வளர்ப்பு அப்படி! அந்தப் பட்டியலில் டாக்டர் மகாதீரை சேர்க்க முடியாது! 

நாட்டின் 14-வது தேர்தலில் வெற்றி பெற்று டாக்டர் மகாதீரை பிரதமர் பதவிக்குக் கொண்டு வந்த போது அவர் ஓர் இடைக்கால பிர்தமர் என்கிற அறிவிப்போடு தான் அவர் பதவி ஏற்றார்.  இதில் ஏதும் ஒளிவு மறைவு இல்லை. 

இப்போது இதனை எதிர்ப்பவர்கள் என்ன காரணத்தோடு எதிர்க்கிறார்கள்?  முக்கியமாக அரசாங்கம் இயங்க முடியாத அளவுக்கு ஒரு நெருக்கதலைக் கொண்டு வருகிறார்கள்!  பக்கத்தான் அரசாங்கம் மக்களிடையே  ஒரு செல்வாக்கைப் பெறாதபடி கவனமாக இருக்கிறார்கள்! இது எதிர்கட்சிகளின் வேலை. அப்படி செய்தால் தான் அது அவர்களுக்கு,  வருகின்ற பொதுத் தேர்தலில் இலாபம்!  ஆளுங்கட்சியில் இருப்பவர்கள், அன்வாரின் முன்னாள் எதிர்ப்பாளர்கள்.  அன்வார் பதவிக்கு வந்தால் தங்கள் பதவிக்கு ஆபத்து என்று நினைப்பவர்கள்!

இப்போது "டாக்டர் மகாதிரே இருக்கட்டும்" என்று புலம்புவர்கள் யார் என்பது புரிகிறது அல்லவா!

No comments:

Post a Comment