Monday 1 July 2019

iஇது உண்மையா....?

நான் அறியாத ஒரு  புதிய  செய்தியை அறிந்து கொண்டேன்.

நமது நாட்டில்  மலையாளப் பள்ளி ஒன்று  இருந்ததாக ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. உண்மையில் இது நாள் வரையில் நான் கேள்விப் படாத செய்தி அது. 

தெலுங்கு மொழிப் பள்ளிகள் இருக்கின்றன. நாம் அறிந்தது தான். நான் ஆங்கிலப் பள்ளியில் படித்த காலத்தில்  எங்கள் பள்ளி அருகே  சீக்கிய  குருத்தவாரா ஒன்று இருந்தது. இப்போதும் இருக்கிறது. அப்போது அந்தக் காலக் கட்டத்தில் அங்கு பஞ்சாபி மொழி பள்ளிக்கூடம் இருந்ததை நான் அறிவேன். அதற்கு "கல்சா ஸ்கூல்" என்று நாங்கள் சொல்வதுண்டு. ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் அதனை மூடிவிட்டார்கள்.

இநத மலையாள மொழிப் பள்ளிகூடம் பாடாங் ரெங்காஸ், கேப்பீஸ் தோட்ட்த்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பொதுவாக இது போன்ற சங்கச் செய்திகளை நான் படிப்பதில்லை. ஆனால் கேப்பீஸ் தோட்டம் என்றால் அது எனது கவனத்தை ஈர்க்கும். காரணம் எனது பள்ளிக் காலத்தில் சிங்கப்பூர், மலாக்கா வானொலி நேயர் விருப்பம் மிகவும் பிரபலம். அப்போது கேப்பீஸ் தோட்டத்தில் இருந்து  பெருமாள் என்னும் நண்பரின் பெயர் தொடர்ந்தாற் போல ஒவ்வொரு நேயர் விருப்பத்திலும் வந்து கொண்டிருக்கும்! அதனால் அந்தத் தோட்ட்த்தின் பெயர் மனதில் பதிந்து விட்டது!

இந்த மலையாளப் பள்ளி என்பது ஒரு புதிய செய்தி என்று சொன்னேன்.  ஒரு வேளை வேறு இடங்களிலும் இருந்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது ஒரு வரலாற்றுச் செய்தி.  அதனை நாம் மறந்து விடக் கூடாது. 

நமது நாட்டில் பல்வேறு மொழிப் பள்ளிகள் இருந்திருக்கலாம். குறிப்பாக சிறுபான்மையோரின் மொழிகளான மலையாளம் மட்டும் அல்ல, ஓடிசா மொழியும் இருந்திருக்கலாம். ஓடிசா மக்கள் குறிப்பிட்ட சில இடங்களில் அதிகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

ஒரு காலக் கட்டத்தில் நான் கிளந்தான் மாநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு  நண்பர்  பேச்சு வாக்கில் தான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள  பெடாஸ், ரெம்பாவில் குடியேறுவேன் சென்று சொன்னது ஞாபக மிருக்கிறது.  என்ன காரணம் என்று கேட்டதற்கு தான் ஓடிசா என்றும் பெடாசில்  தான் ஓடிசா மக்கள் நிறைய  பேர் இருக்கிறார்கள் என்று சொன்னார்.

மலையாளப் பள்ளி  ஒன்று இருந்தது என்று தெரிந்ததும் இந்த ஞாபகமெல்லாம் எனக்கு வந்து விட்டது. வெவ்வேறு  மொழிப் பள்ளிகள் இங்கு இருந்திருக்கின்றன. காலப் போக்கில் ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் பற்றாக்குறை என்று பல்வேறு  காரணங்களினால் அவைகள் மறைந்து விட்டன.

எப்படியோ ஒரு புதிய செய்தியைத்  தெரிந்து  கொண்டேன். இந்தச் செய்தியைக் கொடுத்த தமிழ் மலர்  நாளிதழுக்கு நன்றி!
 

No comments:

Post a Comment