Monday 22 July 2019

இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு..!

சிலங்கூர் ஆற்று நீரில் நச்சுக்கலவை கலக்கப்பட்டிருந்தது   ஒரு சதி செயல் என்பதை அறியும் போது  அதனை நாம் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை.

மேலும் இதுவரை இது போன்ற செய்திகளை நாம் கேட்டதில்லை. இதுவே முதன் முறை என்று நான் நினைக்கிறேன்.

இப்படிச் செய்திகள் வரும் போது இது எதிர்க்கட்சியினரின் வேலையாக இருக்குமோ என்று நாம் நினைப்பது இயல்பு தான். காரணம் அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் எல்லை மீறி விட்டதாகவே நாம் நினைக்கத் தோன்றுகிறது  என்பதும் உண்மை தான்.

இருந்தாலும் அப்படி எல்லாம் நாம் நினைத்து விட முடியாது. நம் விருப்பத்திற்கு நம் கற்பனைகளை கட்டவிழ்த்து விட முடியாது.  இது காவல்துறை  கண்டு பிடிக்க வேண்டிய வேலை.

ஆனால் செய்தியின் படி இது சதி செயல் தான் என்பதாகக் காவல்துறை கண்டு பிடித்திருக்கிறது.  அப்படியென்றால் இது சதி செயல் என காவல்துறை உறுதிபடுத்தியிருக்கிறது. இனி தேவை எல்லாம் இது போன்ற செயல்களுக்கு யார் பின்னிலிருந்து இயக்குகிறார்கள்.என்பதைக் கண்டுபிடிப்பது  தான்.

இது போன்ற செயல்களைத் தீவிரவாதிகள் செய்திருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். பாவ புண்ணியம் பார்க்காதவர்கள்.  அதெல்லாம் அவர்களின் அகராதியில் இல்லை. குடிநீரில் நஞ்சைக் கலந்து பொது மக்களைக் கொல்லுவது என்பதெல்லாம் அவர்களுக்குக் குறுக்கு வழியில் சொர்க்கத்தை அடையும் வழி!

நம் நாட்டில் இது போன்ற செயல்களை ஊக்குவிக்க முடியாது.  இது தீவிரவாதிகளின் சொர்க்க பூமி அல்ல. நமக்குத் தெரிந்தவரை  அரசியல்வாதிகளிடம் தான்  ஏதோ கொஞ்சம் தீவிரவாதம் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் இது போன்ற தூண்டுதல்கள் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டு பிடிப்பது காவல்துறையின் பொறுப்பு.

ஆமாம்! இது ஓரு கடுமையான குற்றச்சாட்டு. இதற்கு உடைந்தையாக இருந்தவர்களோ அல்லது இந்த சதி செய்லுக்குத் தலைமை தாங்கிய்வர்களோ சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். 

அதுவே நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment