தமிழ் இடை நிலைப்பள்ளி தேவையற்ற ஒன்று என்பதாக முன்னாள் கல்வி அமைச்சர் மாட்ஸிர் காலிட் கூறியிருக்கிறார்.
இருக்கட்டும், அது அவரது அபிப்பிராயம் நாம் தலையிட முடியாது. ஆனால் அவர் சொன்ன காரணங்கள் தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இப்படி ஒரு இடைநிலைப்பள்ளியை தோற்றுவித்தால் நன்மையை விட கெடுதலே அதிகம் என்று அவர் சொல்லுகின்ற காரணம் தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதாவது தமிழ் இடை நிலைப்பள்ளி என்றால் அதனால் வரும் தீமைகளே அதிகம் என்று எதனை வைத்து அவர் மதிப்பிடுகிறார்? நம் நாட்டில் சீன மொழி இடைநிலைப்பள்ளிகள் காலங்காலமாக இயங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகள் அப்படி என்ன கெடுதலைக் கொண்டு வந்துவிட்டன என்பது நமக்குப் புரியவில்லை.
ஒரு காலக்கட்டத்தில் சீனர்கள் கம்யூனிசத்திற்கு ஆதரவானர்கள் என்று குற்றம் சாட்டிய போது, சீன இடை நிலைப்பள்ளிகளும் கம்யூனிசத்தைப் பரப்புகின்றன என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லையே! பள்ளிகள், பள்ளிகளாகத்தானே இருந்தன! இப்போதும் இருக்கின்றன!
மாட்ஸிர் தமிழ் இடைநிலைப்பள்ளி பிரச்சனையைத் திசை திருப்புகின்றார் என்பது நமக்குப் புரிகிறது. அவர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லி இந்தப் பிரச்சனையை அரசியலாக்குகிறார் என்பது புரிகிறது. அவர் எதிர்க்கட்சி மலாய் அரசியல்வாதிகளைத் தூண்டி விடுகிறார் என்பதும் நமக்குப் புரிகிறது.
இது போன்ற பிரச்சனைகளை எதிர்ப்பதற்காகவே ஒரு சில அரசியல்வாதிகள், மலாய் அரசு சார்பற்ற நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இவரின் பேச்சு அவர்களை ஊக்குவிப்பதகாவே இருக்கும் என நமக்குத் தெரியும்.
மாட்ஸிர் முன்னாள் கலவி அமைச்சர். இப்படிப் பேசுவதே அவரின் தகுதிக்கு இழுக்கு. ஆனாலும் பேசியிருக்கிறார். தமிழ் இடைநிலைப்பள்ளி பற்றியான அறிவுப்பு வரும் போது தான் இவர்களின் குரல் ஒங்கி ஒலிக்கும்!
பொறுத்திருப்போம்! பொறுத்தவர் பூமி ஆள்வார்!
No comments:
Post a Comment