Sunday 21 July 2019

முனைவர் ராஜேந்திரன் முன்வந்திருக்கிறார்...!

செடிக் நிதி எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது பற்றி வாய்த் திறந்திருக்கிறார்  அதன் தலைமை பொறுப்பிலிருந்த முனைவர் ராஜேந்திரன். 

இது பற்றி விசாரிக்கப்பட்டால் தான் முழு ஒத்துழைப்பையும் தருவதாக உறுதி அளித்திருக்கிறார் ராஜேந்திரன்.

முனைவர் ராஜேந்திரன் ஒரு கல்வியாளர். இன. மொழிப்பற்று உள்ளவர். அவர் நல்லவர், வல்லவர் என்பதாக, அறிந்தோ அறியாமலோ, அவரை நாம் ஒரு நல்லவர் என்னும் பட்டியலில் வைத்திருக்கிறோம்!  அதனால் அவர் பொய் சொல்லுவார் என்று நாம் நம்பவில்லை!

அவர் அறிக்கையைக் காணும் போது ஒரு விஷயம் நமக்குப் புரிகிறது. அவர் மூலம் கொடுக்கப்பட்ட நிதி அனைத்துக்கும் அவர் கணக்கு  வைத்திருக்கிறார்.  அவரைப் பொறுத்தவரை அது தான் முக்கியம் என்று அவர் நினைக்கிறார்.  எல்லாம் அதிகாரப்பூர்வமாக செய்யப்பட்டவை.  கணக்கு வழக்குகள் உள்ளன.   கொடுத்ததற்கு அடையாளமாக ரசீதுகள் உள்ளன.  அதை விட  வேறு என்ன செய்வது என்பது தான் அவர் நிலை. அவரால் வேறு என்ன செய்ய முடியும்? என்று தான் நாமும் நினைக்கிறோம்!

அவருடைய  நிதி பரிவர்த்தனையில் இலட்சம், கோடி என்று போய்க் கொண்டிருந்தது.  கடன் கேட்டவர்களின் பின்னணியை ஆராய முடியாது. எல்லாம் அரசியல் பின்புலம் உள்ளவர்கள்!  அதனால் அவருக்குக் கொடுத்த பணியை அவர் சரியாகச் செய்திருப்பார். கேட்டவர்களின் பின்னணியை ஆராயாமல் பணம் கொடுத்திருப்பார்!  அப்படி செய்யாவிட்டால் அவரை விட மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். 

முனைவரின் ராஜேந்திரனின் நிலை நமக்கும் புரிகிறது. அவரைக்  குறை சொல்ல நம்மால் இயலாது.  மிகவும்  நிதானமான நிலையில் உள்ளவர். அவர் கடமையை அவர் சரியாகச் செய்தார் என்பதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ளுகிறோம். 

செடிக் பிரச்சனையில் அரசியல்வாதிகள்  தலையீட்டினால் தான் இப்படி ஒரு தலைக்குனிவு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.  விசாரணையின் போது அவர் முழு ஒத்துழைப்பைக் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.  அயோக்கியர்கள் செய்யும் அயோக்கியத் தனங்களுக்கு நாம் அவரைக் குறை சொல்ல வேண்டாம் என்பது தான் நமது நிலை. 

நீதிக்குத். தலை வணங்குபவர் முனைவர் ராஜந்திரன்.  நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!

No comments:

Post a Comment