Monday 29 July 2019

நியாயமான விசாரணை கிடைக்காது...!

பிரதமர் துறையின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யுசோப் ராவா,   சர்ச்சைக்குறிய இந்திய ,மத போதகர் ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு நாடு கடத்தாதது ஏன்  என்பது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

"ஜாகிரை நாடு கடுத்துவதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவருக்கு நீதி கிடைக்குமா என்பதில் தான் சிக்கல்.  நீதியை அடிப்படையாகக் கொண்டு அவர் நியாயமாக நடத்தப்பட வேண்டும்.  அங்கு அவருக்கு நியாயமான விசாரணை கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். இந்த விவகாரத்தில் வேறு எந்த தனிப்பட்ட காரணங்களும் இல்லை."

அந்த விளக்கங்களை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம்.  இந்தியாவில் அவருக்கு நியாயமான விசாரணை கிடைக்காது என்பது ஜாகிருக்குத் தான் (பிரதமருக்கும் தான்)  தெரியும். நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.

ஆனால் நமக்கும் அமைச்சரிடமிருந்து  சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. ஜாகிருக்கு மற்ற இஸ்லாமிய நாடுகள் குடியுரிமை கொடுக்காத நிலையில் மலேசிய குடியுரிமை கொடுக்க ஏதாவது விசேஷ காரணங்கள் உண்டா? 
 
 அவருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டதன் நோக்கமே இங்குள்ள இந்து மதத்தினருக்கு எதிராக செயல் பட வேண்டும் என்பது தான் என்று சொல்லப்படுகிறதே! உண்மையா? அவருடைய செய்பாடுகளும் அப்படித்தானே இருக்கின்றன!

இந்தியாவில் அவர் இந்துக்களுக்கு எதிராக செயல்பட முடியவில்லை. அதனால் அவர் இந்துக்களை எதிர்ப்பதற்கு மலேசியாவை ஒரு தளமாக பயன்படுத்துகிறாரா? 

ஜாகிர் எல்லாக் காலங்களிலும் இஸ்லாம் அல்லதவர்களை குறை சொல்லுபவராகவே தன்னை வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறார்.  அது அவருடைய பிரச்சனை. ஆனால் மலேசியாவிலும் இந்துக்களை எதிர்க்கும் வாய்ப்பை அவருக்கு அரசாங்கம் கொடுத்திருக்கிறது.  ஜாகிர் இங்கு அடைக்கலம் நாடுவதற்கு முன்னர் இல்லாத பிரச்சனைகள் எல்லாம் இப்போது எழுகின்றன.  உண்மையைச் சொன்னால் இவருடைய பேச்சுக்கள் அனைத்தும் நிந்தனை சட்டத்தின் கீழ் வரவேண்டும். கடைசியாக இந்திரா காந்தின் குழந்தை பிரசன்னா டிக்சா "மறைக்கப்பட்டு" இருப்பதிலும் இவர் பெயர் அடிபடுகிறது. 

இந்த அளவுக்கு ஜாகிர் இந்த நாட்டில் சுதந்திரமாக செயல்படுகிறார்! இது வரை அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் கொண்டு வரப்படவில்லை!

இங்கு, நமது நாட்டில், நீதி, நியாயம் பற்றி பேச முடியாத போது இன்னொரு நாட்டின் நீதி நியாயம் பற்றி பேசுவது ......என்ன நியாயம்?

அங்கு எப்படி நியாயமான விசாரணை கிடைக்காதோ  இங்கும் அது கிடைக்காது என்று நாமும் நினைக்க வேண்டியது தானோ!

No comments:

Post a Comment