Thursday 18 July 2019

கேள்வி - பதில் (107)

கேள்வி

விஜயகுமாரின் மகள் வனிதா தமிழ் மக்களை முட்டாள்கள் என்று சாடியிருக்கிறாரே!

பதில்

உண்மை தான்!  அதனை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. 

தமிழ் மக்கள் "பிக் போஸ்" பார்க்கின்ற நிலையில் இல்லை. அவர்களுக்கு நிறையவே பிரச்சனைகள் இருக்கின்றன.  குடிநீர் பிரச்சனை. குடிநீர் பிரச்சனை சென்னையில் உள்ள மக்களுக்கு ஓரளவு தீரலாம். இரயில் மூலம் தண்ணீர் வருகின்ற நிலைக்குத் திராவிடக்கட்சிகள் ஒரு நிலையை உருவாக்கிவிட்டன! கிராமங்களில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை. ஆக, தண்ணிர்ப் பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது! இப்படி ஒரு நிலையில் எந்தத் தமிழன் "பிக் போஸ்" நிகழ்ச்சியைப்  பார்க்கப் போகிறான்? 

தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில்  விவசாய நிலங்கள் அபகரிக்கப் படுகின்றன. நாட்டுக்கு வளர்ச்சியைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி மக்களின் விவசாய நிலங்களை பணக்கார நிறுவனங்கள் ஏழை மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு விவசாயப் பெருமக்களும் அழுது கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் எந்தத் தமிழன் "பிக் பாஸ்"  நிக்ழ்ச்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான்?

இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன.   அதில் கல்வி பிரச்சனையும் ஒன்று. நடிகர் சூரிய தனது கருத்தைச் சொல்லப் போக அதனை ஆளும் அரசியல்வாதிகள் - அ,தி.மு.க., பா.ஜ.க. - வினர் நடிகர் சூரியாவை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.  தமிழக மக்களே நடிகர் சூரியாவை ஆதரித்துக் கொண்டிருக்கும் போது  இந்தத் தமிழ் நாட்டுத் துரோகிகள் கல்வி கொள்கையை ஆதரிக்கின்றனர்! இப்படி தமிழ் நாடே கொந்தளிக்கும் போது "பிக் போஸ்" நிக்ழ்ச்சியை எந்தத் தமிழன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  ஒரு கருத்தைச் சரியாக பதிவு செய்திருக்கிறார் சூரியா. "குடிக்க ஆளில்லை என்று எந்த டாஸ்மார்க் சாராயக் கடையும் மூடப்படவில்லை.  ஆனால் படிக்க மாணவர் இல்லை என்று ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்படுகின்றன. இது என்ன நியாயம்!" 

ஆக, தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கு "பிக் போஸ்" பார்க்க நேரமுமில்லை, தேவையுமில்லை!

இப்படித்தான் எவனோ செய்கின்ற தவறுகளுக்கு வனிதா விஜயகுமார் தமிழர்களைச் சாடுகிறார்.

அவர் பிரச்சனையை அவரால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் அதற்குத் தமிழன் என்ன செய்வான்?

No comments:

Post a Comment