Monday 8 July 2019

ஏன் இந்த அளவு பாதுகாப்பு...?

சர்ச்சைக்குறிய இந்திய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீண்டும் மீண்டும் நமது செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறார். 

இது போன்ற சர்ச்சைகளை  அவர்  விரும்புகிறார்  என்று நாம் நம்பலாம்.  அவர் தாய் நாட்டில் அவர் மிதிக்கப்படுகிறார்! அதே சமயத்தில் நமது நட்டில் அவர் மதிக்கப்படுகிறார்!  பிரச்சனை ஒன்றே! அங்கே ஏன் மிதிக்கப்படுகிறார் என்பதற்கும் இங்கே ஏன் மதிக்கப்படுகிறார் என்பதற்கும் ஒரே பிரச்சனை தான்.  ஒவ்வொரு நாடும் அவரவர் கோணத்தில் அவரைப் பார்க்கின்றனர்! இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம் ஜாகிர் நாயக் பலே கில்லாடி என்று!

ஜாகிர் தப்பித்தவறி இந்தியா பக்கம் போனால் அவருக்கு என்ன நடக்கும் என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார்! முக்கியமாக அவர் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்!    அதன் பின்னர் அவர் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும்! 

சரி, ஜாகிர் இந்தியாவால் தேடப்படுவதற்கான காரணங்கள் என்ன?  பல காரணங்கள் உண்டு. அதில் ஒரு காரணம் அவர் மதங்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார் என்பதும் ஒன்று. அவர் சார்ந்த மதத்தை உயர்த்தியும் மற்ற மதங்களைத் தாழ்த்தியும் பேசுகின்ற பழக்கத்திற்கு அடிமையானவர் அவர்!

அந்த மத வெறுப்பு இந்தியாவில் எதிர்ப்பையும் மலேசியாவில் ஆதரவையும் அவருக்குக் கிடைக்க வைத்திருக்கிறது!  அதைத் தான் சொன்னேன். ஒரே பிரச்சனை! இரு பார்வைகள்!

அது சரி. இந்தியாவின் எதிர்ப்புக்கு ஆளான இவர் மலேசியவில் என்ன செய்கிறார்?  இங்கே அவர் பணி என்ன?  

இந்தியாவில் என்ன செய்தாரோ அதையே  தான்  இங்கும் தொடர்ந்து  கொண்டிருக்கிறார்!  இஸ்லாமியர் என்கிற முறையில் மற்ற மதங்களை வெறுக்க வேண்டும் என்பது அவர் படித்த பாடம். எப்படியோ அவர் இந்தியாவின் பிடியில் சிக்கவில்லை!  அது அவர்களின் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால் அவர் அதனையே மலேசியாவிலும் செய்கிறார் என்பது தான் நாம் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். ஆனால் அதைத்தான் அவர் செய்கிறார்!

சமீபத்திய செய்தியின் படி அவர் கிளந்தானில் சமய சுற்றப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். அவர் இஸ்லாமிய போதகர் என்கிற முறையில் அதில் ஒன்றும் வியப்பில்லை. இஸ்லாமிய போதனை என்பது ஒன்றும் நமக்கும் புதிதல்ல. ஆனால் அவருக்கு ஏன் ஏகப்பட்ட பாதுகாப்பு என்ப்து தான் நமக்குப் புரியவில்லை! காவல்துறை அவரின் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்! ஏன்? யார் அவரை எதிர்க்கிறார்கள்?  அந்த அளவுக்குத் தீவிரவாதிகள் நமது நாட்டில்  இருக்கின்றனரா என்பது நமது கண்ணுக்குத் தெரியவில்லை.  ஆனால் ஏதோ ஒன்றை அவர்கள்  எதிர்பார்க்கிறார்கள் என்று தான் நமக்குத் தோன்றுகிறது! 

அது மட்டும் அல்லாமல் அவருக்கு எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கல் என்றால் அப்படி என்ன  தான் அவர் பேசுகிறார்?  இது வரை நமது நாட்டில் எந்த இஸ்லாமிய பேச்சாளர்களும் பேசக் கூடாத ஒன்றை அவர் பேசுகிறாரா!  இஸ்லாம் நமக்கு என்ன புதிதா? இஸ்லாமிய போதனைகள் நமக்கு என்ன புதிதா?  அப்புறம் ஏன் இந்த தடபுடல் பாதுகாப்பு ஏற்பாடுகள்! 

அதைத்தான் நாம் கேட்கிறோம்.  தீவிரவாதம்  எல்லா நாடுகளிலும் உண்டு. நமது நாடு இன்னும் அதனை அனுபவிக்கவில்லை. மலெசியர்களும் அனுபவிக்கவில்லை. ஆனால் அதனைத் தூண்டி விடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை.

நம்மைக் கேட்டால் ஜாகிர் நாயக்கிற்கு இந்த அளவு பாதுகாப்புத் தேவை இல்லை. ஓர் இஸ்லாமிய அறிஞருக்குப்  பாதுகாப்பு என்றால் இந்தப் பாதுகாப்பை அந்த அறிஞரே ஏற்றுக் கொள்ளக் கூடாது!  மலேசியர்கள் சகிப்புத் தன்மை உள்ளவர்கள். அதனை அனைவரும் மதிக்க வேண்டும்.

நல்லதைப் பேசும் போது பாதுகாப்பு எதற்கு?

No comments:

Post a Comment