Monday 29 July 2019

விரைவில் தீரும் எனும் எதிர்ப்பார்ப்போம்!

இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்சாவின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஐஜி.பி  அப்துல் ஹமிட் படோர்  ஒரு சில நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.  தனது அதிகாரிகளைப் பணித்திருப்பதாக கூறியிருப்பது ஒன்றே போதும் நமக்கும் நம்பிக்கை தருகிறது. 

அது மட்டும் அல்ல. அவர் கூறிய ஒரு சில வார்த்தைகள் நம் நெஞ்சைத் தொடுகின்றன. " இந்தக் குழைந்தையின் விவகாரத்தில் ஒரு குடும்பமே சின்னா பின்னமாகி இருக்கிறது.  நாம் மதம் என்னும் அடிப்படையில் பார்க்காமல் அதனை ஒரு குடும்பமாகப் பார்க்க வேண்டும். தாய், மகள், தந்தை, மகன் என்னும் முறையில் இந்தப் பிரச்சனையை நாம் அணுக வேண்டும்." 

இது போன்ற வார்த்தைகள் காவல்துறை தலைவரிடமிருந்து வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு முன்னர் காவல்துறை தலைவர் யாரும் இப்படிப் பேசியதில்லை. 

அதிலும் குறிப்பாக "மதம் என்னும் அடிப்படையில் பார்க்காமல்...." என்று அவர் கூறியிருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது.  இது நாள் வரை அதிகாரத்தில் உள்ளவர்கள் அப்படி யோசிக்கவில்லை என்பதும் நமக்குப் புரிகிறது! 

காவல்துறை தலைவருக்கு ஒரு வேண்டுகோள். நம்பிக்கை தரும் வார்த்தைகள் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறது.  ஆனால் அது வெறுமனே வார்த்தை அளவில் இருக்கக் கூடாது. அது செயல் வடிவம் காண வேண்டும்.  

நமது காவல்துறையால் முடியாதது என்று ஒன்றுமில்லை.  அவர்களால் கண்டு பிடிக்க  இயலாது என்று யாரும் இது வரை சொன்னதில்லை.  மேலிடத்து நெருக்குதல் மட்டுமே அவர்களைக் கட்டுப்படுத்தும். மற்றபடி அவர்கள் செயல் வீரர்கள்.  அரசியல் நெருக்கடி, மதவாதிகளின் நெருக்கடி இவைகள் தான் அவர்கள் கண் முன்னே உல்ள பிரச்சனை.

மற்றபடி இது ஒரு பிரச்சனையே அல்ல.  என்றோ தீர்த்துக் கொண்டிருக்க வேண்டிய பிரச்சனை. "யார் பெரியவன்" என்னும் கயிறு இழுக்கும் போட்டி தான் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது!

காவல்துறை தலைவரின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் நமக்கு உற்சாகம் ஊட்டுகின்றன. பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என நம்புவோம். 

No comments:

Post a Comment