Wednesday 10 July 2019

எலி பிரியாணியா..?

பினாங்கு, ஜோர்ஜ் டவுனில் மிகப் பிரபலமான பிரியாணி உணவகம்.  சுற்றுப் பயணிகளிடையே மிகவும் பிரசித்திப் பெற்ற  ஓர் உணவகம்.

அது ஓர் இந்தியர் (மாமாக்) உணவகமாகத்தான் இருக்க வேண்டும். வேறு இனத்தவர் யாரும் மாமாக்களுடன் போட்டிப்போடப் போவதில்லை. இதை நாம் அறிந்தது தான்.  இதெல்லாம் நல்ல செய்திகள் தான். நம் இனத்தவரின் வெற்றி நமது வெற்றியாகத்தான் தான் நாம் பார்க்க வேண்டும்.

ஆனால் அங்கிருந்து வரும் கெட்ட செய்திகளைப் பார்க்கும் போது நமக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.  மனம் ஒப்பவில்லை.  சமயலறையில் எலிகளின் எச்சம்!  இறந்து போன பல்லிகள்!  ஏன் இறந்து போன எலிகள் கூட இருக்கலாம். அதிசயம் ஒன்றுமில்லை. இதனை எல்லாம் தெரிந்த பிறகு எப்படி இது போன்ற உணவகங்களுக்கு வாடிக்கையாளர்களாக இருக்க முடியும்? 

நாம் அந்தக்  குறிப்பிட்ட உணவகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. நாட்டில் பல பிரபல உணவகங்கள் இருக்கின்றன. பிரபல உணவகங்கள், அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட உணவகங்கள் - இது போன்ற உணவகங்களுக்குச் செல்லுவதற்கே நமக்கு அச்சமாக இருக்கிறது!  காரணம் வேலை செய்பவர்கள் வாடிக்கையாளர்களைக் கவனிக்கத் தான் நேரம் ஒதுக்குவார்களே தவிர என்ன செத்துக் கிடக்கிறது என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அந்த நாற்றத்தையெல்லாம் தாங்கும் சக்தி அவர்களுக்கு இருக்கிறது!  நமக்குத் தான் இல்லை!

இங்கே இன்னொரு  செய்தியையும்  நாம்  குறிப்பிடத்தான் வேண்டும்.  வேலை செய்பவர்கள்  வேலையில்  அலட்சியம்  காட்டினால்  அந்த அலட்சியம் வாடிக்கையாளர்களுக்குத் தான் போய்  சேரும்! அவை தரமற்ற உணவுகளாக வாடிக்கையாளர்களுக்கு வரும்!

வேலை செய்யும் நண்பர்கள் முதலில் தங்களின் ஊதியத்தைத்  தான்  பார்ப்பார்கள்.  குறைவான சம்பளம், அதிகமான வேலைப் பளு, ஓய்வு இல்லாமல் அதிக நேரம் அவர்களை வேலை வாங்குதல் - இவைகளெல்லாம்  அவர்களின் வேலையில்  பிரதிபலிக்கும். 

கடை முதலாளிகள் தங்களின் வேலயாள்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள செய்கின்ற பிரியாணி, பிரியாணியாக இருக்கும்.  இல்லாவிட்டால் அவர்கள்  கோபத்தில் எலியைக் கூட பிரியாணியாக்கி விடுவார்கள்!

உணவகங்களில் எதுவும் நடக்கலாம்!

No comments:

Post a Comment