Sunday 28 July 2019

இத்ற்கு அனுமதி உண்டா...?

இந்திரா காந்தியின் முழந்தை பிரசன்னா டிக்சாவை கண்டு பீடிக்கும் வேலையில் இறங்கியிருக்கும்  இங்காட்,  அரசு சார்பாற்ற இயக்கம்,   அதன் தொடர்பில் பல தகவல்களைக் கொடுத்திருக்கிறது.

ஆனால் அவர்கள் கொடுத்திருக்கும் ஒரு தகவல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்பது உண்மையே.  அதாவது இதன் தொடர்பில் இந்திய மத போதகர் ஜாகிர் நாயக் பெயரும் அடிபடுகிறது  என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!

உண்மையைச் சொன்னால் அவருக்கும் இந்த குழந்தை மறைத்தல் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் மலேசியக் குடியுரிமை பெற்றவர் என்பதால் அவர் வலிந்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுகிறாரா என்பதையும் மறுப்பதற்கில்லை. 

அவர் என்ன தான் மலேசியக் குடியுரிமை பெற்றவர் என்றாலும் அவர்  வெளி நாடு ஒன்றின் தேடப்படும் குற்றவாளி என்பதையும் மறுப்பதற்கில்ல.  நேரங்காலம் வரும் போது அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட வேண்டிய குற்றவாளி.

அவர் ஏன் தேடப்படுகிறார் என்பதை நாம் அறிவோம்.  அவர் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்  என்பது ஒரு குற்றச்சாட்டு.  அவரைப் பல இஸ்லாமிய நாடுகள் அவருடைய நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள வில்லை!  குறிப்பாக வங்காள தேசம் அத்தோடு இன்னும் பல நாடுகள்.

இந்தியாவும் அதே இஸ்லாமிய நடவடிக்கைகளுக்காக அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கிடையே  க்லவரத்தை ஏற்படுத்துகின்ற முயற்சியிலும்  அவர் ஈடுபாடு காட்டியிருக்கிறார் என்பதாகவும் சொல்லப்படுகிறது.

இன்றைய நிலையில் அவர் இந்திய நாட்டுக்குப் போகக் கூடிய சூழல் ஏற்பட்டால், அங்குள்ள அரசியல் சூழலில் அவருக்கு என்ன நடக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.  அதனை நாம் வரவேற்கவில்லை. ஆனால் அங்கு அவர் செய்த வேலைகளை, இப்போது அங்கு செய்ய முடியாத நிலையில்,  அவர் இங்கு செய்ய முயற்சிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ளவோ, வரவேற்கவோ முடியாது.

சமீப காலங்களில் நமது நாட்டில் அவரது பெயர் இந்துக்கள் சம்பந்தப்பட்ட சில பிரச்சனைகளில் அடிபடுகிறது.என்பதை அறியும் போது நமக்கு அது மகிழ்ச்சியை அளிக்கவில்லை.  சான்றுக்கு மத போதகன் என்று சொல்லிக் கொண்டு ஓர் இந்துவை இஸ்லாமியனாக்கி அவர் மூலம் இந்துக்களைக் குறை கூறி கைத்தட்டல் வாங்குவது! இப்போது ஏதோ ஒரு வகையில் இந்திராகாந்தியின் மகள் பிரசன்னா வின் மறைத்தல் சம்பவத்தில்  அவரது பெயரும் அடிபடுகிறது!

இது நமக்குத் தெரிந்த சம்பவங்கள். நமது பார்வைக்கு வராத இன்னும் எத்தனையோ சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கலாம். 

ஜாகிர் நாயக் இப்படி இந்துக்களின் விஷயத்தில் தலையீடுவது நல்லதல்ல!

 

No comments:

Post a Comment