Tuesday 23 July 2019

ம.இ.கா.வின் சொத்தா...?

பேரா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக கொடுக்கப்பட்ட 2,000   ஏக்கர் நிலம் பற்றி இப்போது  தான் வீதிக்கு வந்திருக்கிறது!

இதே போல 2,000 ஏக்கர் நிலம் சீனப் பள்ளிகளுக்கும் மலாய் சமயப் பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து கிடைக்கும் வருமானத்தை  அந்தப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக   பயன் படுத்துகின்றனர்.

அவர்களைச் சந்தேகிக்க ஒன்றுமில்லை.  அவர்களின் பள்ளிகளுக்கு அந்த வருமானம் தேவை அதனால் அதனைப் பயன் படுத்துகின்றனர். 

ஆனால் தமிழ்ப்பள்ளிகளின் நிலை வேறு. அந்த நிலம் போய்ச் சேர வேண்டிய இடத்தில் போய்ச் சேராமல் ம.இ.கா.   என்னும் முதலைகளிடம் போய்ச் சிக்கிக் கொண்டது!  இங்கே தான் பிரச்சனையே ஆரம்பம்!  மலாய், சீனப் பள்ளிகள் தங்களது நிலங்களின் மூலம் வருகின்ற வருமானத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.  ஆனால் இங்கோ நிலைமை வேறு. இது யார் நிலம்? யாருக்குச் சொந்தம்?  என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் ஒரு முக்கிய விஷயத்தை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த 2000 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள் ம.இ.கா. இந்திய்ர்கள்.  இவர்கள் தமிழ் என்றால் என்னவென்று தெரியாது, தமிழ் மொழி என்றால் என்னவென்று தெரியாது, தமிழுக்கும் இவ்ர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!  ஆனால் இவர்களிடம் தான் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக 2000 ஏக்கர் நிலத்தை தாரை வார்த்திருக்கிறார்கள்! இதை விடக் கொடுமை வேறு என்ன வேண்டும்?

ஆனால் இதனை வேறு ஒரு கோணத்திலும் நாம் பார்க்க வேண்டும்.  இந்த நிலம் ம.இ.கா. வின் சொத்து என்று இப்போது அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்! அப்படி என்றால் என்ன அர்த்தம்? ம.இ.கா. வின் சொத்துக்கள் அனைத்தும் முன்னாள் தலைவர் சாமிவேலுவின் பெயரில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது!  இது நாள் வரை ம.இ.கா. அதனை மறுக்கவில்லை!  அப்படி என்றால் அது ம.இ.கா. சொத்து அல்ல. சாமிவேலுவின் சொத்து என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி என்றால் இந்த 2000 ஏக்கர் நிலம் ம.இ.கா. சொத்து என்றால் அது யார் பெயரில் இருக்க வேண்டும்? இன்றைய ம.இ.கா. தலைவர் பெயரில் தானே இருக்க வேண்டும்!  

எது எப்படியோ போகட்டும். நாம் சொல்ல வேண்டியது ஒரு விஷயம்தான். இந்த நிலம் இந்த விஷக்கிருமிகளிடமிருந்து  காப்பாற்றப்பட வேண்டும். எது போன்ற நடவடிக்கை  தேவை என்பது   நமக்குத் தெரியவில்லை. 

ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தான் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும். இவர்களுக்குச் சிறைவாசம்  ஒன்று தான் சரியான தண்டனையாக இருக்கும். 

அது நடக்கும் என திர்ப்பார்க்கிறோம்!

 

No comments:

Post a Comment