Sunday 11 August 2019

இது ஜாகிரின் வேலை அல்ல..!

ஜாகிர் தனது எல்லையை மீறிவிட்டார்!

அதற்கு யார் காரணம்?  டாக்டர் மகாதிர் என்கிற ஒரே மனிதர்!   ஜாகிர் நாயக் இந்தியர்களின் விசுவாசத்தைப் பற்றி கேள்வி எழுப்புவது  என்பது அவருக்கு அளவுக்கு மீறிய சுதந்தரத்தை  பிரதமர் மகாதிர் வழங்கியிருக்கிறார் என்றே தோன்றுகிறது!  

ஜாகிர் நாயக் இந்திய அரசால் தேடப்படும் ஒரு குற்றவாளி. சமயத்தை வைத்து பணம் சம்பாதிப்பது மட்டும் அல்ல அவர் வேலை பணம் கையாடல் என்பதும் அவர் மேல் உள்ள பல குற்றச்சாட்டுகளில் ஒன்று.

முதலில் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். இந்திய நீதிமன்றத்தில் போய் அவர் நிற்க வேண்டும். குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். 

நீதியை நேர் கொள்ள அவருக்குத் திராணி இல்லை.  நேர் கொள்ள துணிச்சலோ  தைரியமோ இல்லாத நேர்மையற்ற ஒரு மனிதராக மலேசியாவில் தஞ்சம் புகந்திருக்கும் அவர் இங்குள்ள இந்தியர்களைப் பற்றி  கேள்வி எழுப்புகிறார்.  அவர் கற்ற  கல்வி அவருக்கு நேர்மையைக் கற்றுக் கொடுக்கவில்லை. பின்புற வழியாக எப்படித் தப்பிப்பது என்று தான் சொல்லிக் கொடுத்திருக்கிறது!  

இப்படி ஒரு கோழைக்குத் தான் பிரதமர் மகாதிர் வீரத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்! அதுவும் இங்குள்ள இந்தியர்களை எப்படித் தாக்கிப் பேசுவது, இந்து மதத்தை எப்படி இழிவாகப் பேசுவது போன்ற விஷயங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வழிகாட்டியிருக்கிறார்! 

ஒரு கேள்வி ஜாகிர் நாயக்கிடம் கேட்கிறேன்.  கிளாந்தானில்  "மாபெரும்" கூட்டத்தில் பேசி கைதட்டல் வாங்கியது போல் அதனையே ஜொகூர் மாநிலத்தில் பேசி கைதட்டல் வாங்க முடியுமா?   மாநில சுல்தான் உங்களைக் கழுத்தைப் பிடித்து விரட்டி அடித்திருக்க மாட்டாரா! அதனால் பார்த்துப் பேசுங்கள்!  உங்கள் நேரம் இப்போது சரியில்லை. எந்த நேரத்திலும் நீங்கள்  விரட்டி அடிக்கப்படலாம்! குறைந்தபட்சம்  துரத்தி அடிக்கப்படலாம்! எதுவும் நடக்கும்! இது தான் இன்றைய நிலை!

எந்த ஒரு இஸ்லாமிய நாடும் உங்களுக்கு  அடைக்கலம் கொடுக்கவில்லை.  மலேசியா கொடுத்திருக்கிறது.  இந்த நாட்டுக்கு உங்கள் நன்றியைக் காட்டுங்கள். இந்த நாட்டில் கலகத்தை ஏற்படுத்தாதீர்கள். 

இப்போது உங்கள் பெயர் பல விஷயங்களில் அடிபடுகிறது. இந்திரா காந்தியின் மகள் பிரச்சனை, மதம் மாற்றும் பிரச்சனை, இங்குள்ள இந்தியர்கள் இந்திய பிரதமர் மோடியை ஆதரிக்கிறோம் என்று குற்றம் சாட்டுவது - இதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல! 

ஒன்றை நினவில் வையுங்கள். உங்கள் கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது என்பதற்காக  மலேசியாவில் முக்கிய மனிதர்களில் ஒருவராக ஆகிவிட்டதாக நினைத்து விடாதீர்கள்!  ஒரு கைதிக்கு உள்ள சுந்ததிரம் தான் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது!

மோடியா லேடியா என்பது உங்கள் பிரச்சனை! மகாதிரா அன்வாரா என்பது எங்கள் பிரச்சனை! 

பிரதமர் மகாதிர் உங்கள் சார்பாக

No comments:

Post a Comment