Saturday 24 August 2019

இது போதுமே...!

இஸ்லாமிய சமயப் போதகர், ஜாகிர் நாயக்கைப் பற்றி நிறையவே பேசிவிட்டோம். அறிக்கைகள் விட்டுவிட்டோம். எழுதி விட்டோம். 

இதுவரை எழுதியதும் பேசியதும் போதும் என்றே நான் நினைக்கிறேன்.

நாம் விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ அவர் இனி  ஒரு போதும் பொது வெளியில் தனது வாலை ஆட்ட முடியாது!  அது காவல்துறையின்  உத்தரவு.  அது மட்டும் அன்றி எல்லா மாநிலங்களும் அவ்ருடைய சொற்பொழிவுகளுக்குத் தடை விதித்து விட்டன! தடை விதிக்காத மாநிலங்கள் இருக்கலாம். அங்கும் காவல்துறை அவரைக் கண்காணிக்கும். இப்போதைக்கு இது போதும்.


ஜாகிரை நாடு கடத்த வேண்டும் என்பது நமது விருப்பமாக இருந்தாலும் அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள - சட்ட திட்டங்களுக்கு உட்பட்டஒரு விஷயம்.  அரசாங்கம் தான் எது சரி, எது தவறு என்று முடிவெடுக்க வேண்டும். நாம் அவசரப்பட தேவை இல்லை! அப்படியே அவசரப்பட்டாலும் எதுவும் ஆகப் போவதும் இல்லை!

நாளையே அரசாங்கத்தின் முடிவுகள் மாறலாம்.  அது ஜாகிர் நாயக் எப்படி நடந்து கொள்ளுகிறார் என்பதைத் பொறுத்தது. அவர் ஆபத்தானவர் என்று தெரிந்தால் உடனே அவரை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்!

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்க வாய்ப்பில்லை.  ஜாகிரால் சும்மா இருக்க முடியாது என்பது உண்மையிலும் உண்மை!  அவர் எங்கிருந்தாலும் அவரது கவனம் ஒன்றே ஒன்றில் தான் இருக்கும்.  அது தீவிரவாதம். தீவிரவாதம் தான் இன்றைய பணம் கொழிக்கும் தொழில்! அவர் தீவிரவாதத்தை வளர்ப்பவர்!  அது தன்னால் தெரிய வரும். 

ஆனால் மலேசியாவில் இருப்பது இன்னொரு சௌகரியம் அவருக்கு உண்டு. இந்து மதத்திலிருந்து மதம் மாறுபவர்கள் இனி அவருடைய கட்டுப்பாட்டில் தான் வருவார்கள். அவருக்கு அது போதும். இப்படி மதம் மாறுபவர்களை வைத்தே இந்து மதத்தினரை கேவலப்படுத்தும் வேலையில் அவர் இறங்குவார்!  அவர் நேரடியாக இறங்காவிட்டாலும்  அவருடைய "சீடர்கள்" இறங்குவார்கள் என நம்பலாம்!

இப்போதைக்கு நாம் அவரை விட்டு விடுவோம். எலி தானே வந்து கண்ணியில் சிக்கும்!  அது தானே நடக்கும்!  அது வரை நாம் பொறுத்திருப்போம்! இப்போதைக்கு இது போதுமே!

No comments:

Post a Comment