Wednesday 14 August 2019

ஜாகிர் கொல்லப்படலாம்...!

-பிரதமர் டாக்டர் மகாதிர்  ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்!

சமயப் போதகர், ஜாகிர் நாயக் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பினால் அங்கு அவர் கொல்லப்படுவார் என்பதாக பிரதமர் கொடுத்த ஆகக் கடைசி செய்தி நம்மையும் அச்சப்படுத்துகிறது. 

இந்தியா அளவுக்குக் கொடுரமான நாடா என்பது நமக்குத் தெரியாது.  அரசியல்வாதிகளுக்குத் தான் வெளிச்சம்!

அவர் கொல்லப்படுவார் என்பதை எந்தக் கோணத்தில் சொல்லுகிறார்?  ஒரு தீவிராதி தீவிரவாதிகளால் தான் கொல்லப்படுவார் என்பதைப் பார்க்கிறோம். வாள் எடுத்துவன் வாளால் தான் சாக வேண்டும். அது தான் நியதி.   தீவிரவாதிகளின் நிலைமை இந்தியாவில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை.

ஒரு வேளை அவருக்குக் காவல்துறையினர் மூலம் ஆபத்து வருமா என்பதும் புரியவில்லை. நமது நாட்டிலேயே காவல்துறையினர் மூலம் வருகின்ற, சிறையில் நிகழுகின்ற  சாவுகள்,  ஏராளம். அதற்கான காரணங்களும் பல.  குறிப்பாக நோயினால் வருகின்ற சாவுகள் தான் அதிகம்!   இது தான் காவல்துறையினரின் நிலைமை.  சிறையில் நிகழுகின்ற மரணங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பது தான் நமது அனுபவம்.அங்கும் இது நடக்கலாம்.   அது நோய் மூலம் வருகின்ற மரணமாக இருந்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அது தான் விதி என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியது தான்!

இன்னொன்று நீதிமன்றம் மூலமாக வருகின்ற தண்டனை. மரண தண்டனை கிடைக்கும் அளவுக்கு  ஜாகிர் நாயக் மேல் குற்றச்சாட்டுச் சாட்டுக்கள் உண்டா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  ஒரு வேளை நீண்டகாலச் சிறை தண்டனையாகக் கூட இருக்கலாம்.  இப்போது நாம் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. 

ஆக, நமக்குத் தெரிந்த வரை அவர் கொல்லப்படுவார் என்று டாக்டர் மகாதிர் குறிப்பிடுவது இந்த மூன்றுக்குள் தான் அடக்கம்.   அல்லது வேறு வகையென்றால் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.  அது அரசியல்வாதிகளுக்குத்  தான்  புரியும்!

எது எப்படி இருப்பினும் அவர் காரணத்தோடோ, காரணமின்றியோ
இப்படியெல்லாம் அவர் கொல்லப்பட வேண்டும் என்று நாம் விரும்பவில்லை.  அவர் ஒரு சமயப் போதகர். நல்ல போதனைகளை மக்களிடம் சேர்க்க வேண்டியது அவரின் பொறுப்பு. அதைத் தான் அவர் செய்ய வேண்டும்.   செய்வார் என நம்பலாம்.

ஜாகிர் கொல்லப்பட வேண்டிய மனிதர் அல்ல. அரசாங்கம் அவரை நல்ல நேர் வழியில் நடத்த வேண்டும். அவருக்குச் சரியான பாதையைக் காட்ட வேண்டும்.

ஜாகிர்  நீண்ட காலம் வாழ பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment