Tuesday 13 August 2019

"பேட் ரியோட்" சொல்லுவது தான் சரி!

நாம் சொல்லுவது எட்ட வேண்டிய இடத்திற்கு இட்டுச் செல்லாது.

நாம் சொன்னதையே இப்போது "பேட் ரியோட்" என்னும் நாட்டப்பற்று இயக்கத்தின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர்  ஜெனெரல் முகமட் ஆர்ஷாட் ராஜி கொஞ்சம் ஆக்ரோஷமாகவே அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறியிருக்கிறார்.

ஆமாம் சமயப் போதகர் ஜாகிர் நாயக் இந்தியர்களின் நாட்டுப்பற்று பற்றி கேள்வி எழுப்பியுள்ளது பற்றி ஆர்ஷாட் கண்டித்திருக்கிறார். இந்தியர்களின் அர்ப்பணிப்பை உணராத ஜாகிர்.  ஒரு நேர்மையற்ற சொந்த நலனில் அக்கறை கொண்ட சுயநலவாதி என வர்ணித்திருக்கிறார்  ஆர்ஷாட்.  மதப் பிரச்சாரம் செய்வது பிரச்சனையல்ல ஆனால் மதங்களை ஒப்பிட்டுப் பேசி கலவரங்களை ஏற்படுத்த முயற்சிப்பது ஏற்புடையதல்ல என்பதை ஜாகிர் புரிந்து கொள்ள வேண்டும். 

மேலும் ஜாகிர் நாட்டில் அடைக்கலம் புகுந்தவர்.ஒரு கால கட்டத்தில் 1எம்டிபி நிதி முறைகேட்டை  திசை திருப்பவே ஜாகிருக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டது.  

இப்போது ஜாகிர் குடியுரிமை பெற்றவர் என்னும் தைரியத்தில் நாட்டின் எல்லாப் பிரச்சனைகளிலும் தலையிட ஆரம்பித்து விட்டார். இந்துக்களை மட்டம் தட்டுவது,  சீனாவில் யூகுர் இனத்தவர்களின் மீதான அடக்குமுறையை விமர்சிப்பது  போன்ற பிரச்சனைகளில் தலையிடுவது தவறு என்பதை அவர் புரிந்து கொள்ள வில்லை. 

அவரால் நாட்டுக்குக் கேடு வரும் எனத் தெரிந்தும் அவர் ஏன் இன்னும் நாடு கடத்தப்படவில்லை என்பதாக  ஆர்ஷாட்  கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் இந்த அளவுக்கு அவருக்கு சலுகைக் கொடுத்து வைத்திருப்பதைப் பார்க்கும்போது  கூடிய சீக்கிரம் இவர் அமைச்சரவையில் இடம் பெறக் கூடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது!  அந்த அளவுக்கு அவருடைய கருத்துக்கள் தீவிரவாதிகளால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. ஆதரிக்கப்படுகின்றன.

இவர் எங்குப் போனாலும் அந்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி எடுக்கிறார் என்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு. போகிற போக்கை பார்க்கின்ற போது இவர் இங்கு கலகத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்திவிட்டுத் தான் நாட்டை விட்டு விடை பெறுவார் எனத் தோன்றுகிறது!

இவரது ராசி என்பது கலக ராசி! 

பேட் ரியோட் சொல்லுவதைக் கேளுங்கள்!  இது நாட்டு நலன்! ஜாகிருக்கு நாடு இல்லை!


No comments:

Post a Comment