Sunday 18 August 2019

என்ன கொடுமை இது...?

இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது!

யானை என்றால் நமது கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அதன் பெருத்த, கொழு கொழு உருவம்.  அப்படித்தான் நாம் பார்த்து வந்திருக்கிறோம்.  பார்ப்பதற்கு ஒரு பயத்தை ஏற்படுத்தினாலும்  அதற்கு மதம் பிடிக்காதவரை அது மிகவும் சாதுவான பிராணி.  அதனால் தான் குழைந்தைகள் கூட யானைகளிடம் விளையாட முடிகிறது. 

ஆனால் நாம் பார்த்ததற்கு நேர் மாறாக ஒரு யானையின் உருவம் வலைத்தளங்களில் உலா வருகிறது. 





பாருங்கள். எலும்பும் தோலுமான ஒரு யானையின் நிலைமையை. என்ன தான் ஒரு மிருகமாக இருந்தாலும் அதற்கும் வலி, வேதனை அனைத்தும் இருக்கத்தானே செய்யும்.

கண்டி, இலங்கையில்  நடைபெரும் பௌத்த உற்சவம் ஒன்றில் நேர்த்திகடனைச் செலுத்துதற்காகவே    இதன் உரிமையாளர் இந்த யானையை அங்குக் கொண்டு சென்றதாக கூறியிருக்கிறார். அதற்கு உடல் நலம் குன்றியிருப்பதால் அதனைக் குணப்படுத்தும்  வகையில் நேர்த்திக்கடன் வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்!

அது வயதான ஒரு பெண் யானை. வயது எழுபது என்பதாக மதிப்பிடப் படுகிறது.  சரியான உணவு கொடுக்கப்பட வில்லை.  அதனால் நலிந்து, மெலிந்து காணப்படுகிறது.உற்சவம் என்னும் பெயரில் அதனை பலகிலோ மீட்டர் தூரம் நடக்க வைக்கப்படுகிறது. அதன் நலிந்த உருவத்தை மறைக்க அதற்கு ஏதோ  ராஜ மரியாதை கொடுப்பது போல ஆடை ஆபரணங்கள்! உற்சவத்தின் போது நடக்கும் காதை  பிளக்கும் ஒலிப்பெருக்கிகள், கண்கள் பாதிக்கின்ற அளவுக்கு ஒளி வெள்ளம் - இதனை அனைத்தையும் கடந்து அந்த யானை. கண்களில் கண்ணீர் சொட்ட சொட்ட ஊர்வலம் வருகிறது!

இனி இது நடக்காது என்பாதாக ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்திருக்கின்றனர்.   மனிதர்கள் பண்ணுகின்ற அழிச்சாட்டியங்கள், அட்டுழியங்கள் சொல்லி மாளாது. 

விலங்குகளைக் கொடுமைப் படுத்தாதீர்கள் என்பதை சொல்லுவதைத் தவிர வேறு என்ன சொல்ல/

No comments:

Post a Comment