ஒரு சில விஷயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை! அதாவது எப்போதுமே புரிந்து கொள்ள முடியமில்லை!
நமது நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டில் இப்போது பெயர் போட்டுக் கொண்டிருப்பவர் ஸ்ரீ அபிராமி என்னும் ஏழு வயது குழந்தை!
இது வரை உலக ரீதியில் இருபதுக்கு மேற்பட்ட தங்கப்பதக்கங்களை வாரிக் குவித்திருக்கிறார். நாம் அதனைப் பெரிய சாதனையாகவே பார்க்கிறோம்.
ஆனால் அரசாங்கப் பார்வைக்கு அது சாதனையாகத் தெரியவில்லை. அரசாங்கம் என்று சொல்லும் போது நாம் விளையாட்டுத் துறை அமைச்சையே குறிப்பிடுகிறோம். ஒரு வேளை ஏழு வயது குழந்தை என்னும் போது அந்த வயது குழந்தைகள் அமைச்சின் கீழ் வருமா என்று தெரியவில்லை. அங்கு வயது கட்டுப்பாடு உண்டா என்பதை நான் அறியேன். இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
அடுத்து அந்தக் குழந்தை பனிச்சறுக்கு விளையாட்டில் 2026-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் சாதனை புரிய வேண்டும். அதற்குத் தகுதி பெற இன்னும் பல பயிற்சிகள் தேவைப்படுகின்றது. அதறகான வசதிகள் ரஷ்யாவில் உள்ளதாக சொல்லப்படுகின்ற வேளையில் ரஷ்யாவில் பயிற்சி பெற சுமார் 27 இலட்சம் வெள்ளி செலவாகும் என மதிப்பிடப்படுகின்றது.
அதன் செலவுகளை யாரும் ஏற்காத நிலையில் ஓம்ஸ் அறவாரியம் - தமிழ் மலர் நாளேட்டின் - ஓம்ஸ் தியாகராஜன் சுமார் எட்டு இலட்சம் வரை செலவினை ஏற்றுக் கொண்டுள்ளார். வாழ்த்துகிறோம்!
நல்லது செய்பவர்களுக்கு நாலு வார்த்தை நல்லதைச் சொல்லுவோம். சமுதாயத்தில் கொள்ளைக் கும்பல்கள் மலிந்துவிட்டன. இந்த நிலையிலும் நல்லதைச் செய்ய நாலு பேர் இருக்கின்றனரே என்பது நல்ல செய்தி.
ஓம்ஸ் தியாகராஜன் செய்திருப்பது ஒரு நல்ல தொடக்கம். மேலும் ஏற்படப் போகின்ற செலுவுகளை ஏற்க மற்ற நல்ல உள்ளங்கள் முன் வருவர் என எதிர்பார்க்கலாம்.
நம் இளைஞர்கள் நடிகர் சங்கங்கள் வைத்திருக்கிறார்கள். நான் அதனை வரவேற்பவன் அல்லன். இந்த இளைஞர்கள் பாலாபிஷேகம் செய்வதைவிட்டு இது போன்ற நல்ல காரியங்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்>
நமது அமைச்சுகள் ஏன் உதவ முன் வரவில்லை என்பதைவிட்டு எப்படி நாம் உதவுவோம் என யோசிப்போம். காரணம் தெரிய வரும் பொறுத்திருங்கள்!
No comments:
Post a Comment