Wednesday 14 August 2019

ஆபத்தான மனிதர்...!

இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் மிகவும் ஆபத்தான மனிதர் என்பதைக் காட்டி விட்டார்.

இளம் வயதிலிருந்தே தீவிரவாதத்தையே பேசிப் பேசி வளர்ந்த அவர் இப்போது அதனை விட முடியாமல் போகிற இடம் எல்லாம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்!  

எந்த ஒரு இஸ்லாமிய நாடும்  அவரை ஏற்க தயாராக இல்லாத  நிலையிலும் அவர் தீவிரவாதத்தையே பேசி வருகிறார். பேசுகிறார் என்பதை  விட கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். 

"உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது"  என்பதை நாம் ஜாகிர் நாயக்கிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு நாடும் ஏற்காத  நிலையில் மலேசியா அவரை ஏற்றுக் கொண்டது.  ஏற்றுக் கொண்ட நாட்டிற்கே துரோகம் செய்து கொண்டிருக்கிறார் ஜாகிர்! இது ஒரு பச்சைத் துரோகம் என்பதை அறியாதவரா ஜாகிர்? 

மலேசியா அவருக்கு அடைக்கலம் கொடுத்த நாடு. அப்படி அடைக்கலம் கொடுத்த நாட்டில் இருந்து கொண்டே  கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.

மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு.  ஆனாலும் பல சமயத்தினர், பல இனத்தவர், பல மொழி பேசுகின்றவர்கள் உள்ள ஒரு நாடு.  அடைக்கலம் புகுந்த போது இதனை அறியாமலா அவர் இங்கு வந்தார்?

அவர் தஞ்சம் புகுந்தவர்.  அவர் பேச்சுக்கு ஓர் எல்லை உண்டு.  எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதை அறிந்தவர்.  ஆனாலும் அவரது பேச்சு எல்லை மீறி விட்டது!  நேற்று வந்த இவர் இந்தியர்களின் விசுவாசத்தைப் பற்றி பேசுகிறார்.  இந்து சமயத்தைப் பற்றி பேசுகிறார். சீனர்களை "விருந்தாளிகள்" என்கிறார்.  இந்திரா காந்தி மகள் விஷயத்தில் தலையீடு செய்கிறார். ஸம்ரி வினோத் என்பவரை வைத்து  இந்தியர்களைக் கேவலப் படுத்துகிறார்,  இவர் வெளியேற்றப்பட்டால் "தேடி வந்து உன் தலையை வெட்டுவோம்" என்று வழக்கறிஞருக்கு மிரட்டல் விடச்செய்திருக்கிறார்!

இந்த அளவுக்கு ஜாகிர் நாயக்கின் செல்வாக்கு உயந்திருக்கிறது! 

கடைசியாக ஒன்று சொல்வோம்:பேச்சு சுதந்திரம் மலேசியருக்கு மட்டுமே.  தஞ்சம் புகும் தறுதலைகளுக்கல்ல! 

ஜாகிர் நாயக் ஆபத்தான மனிதர்! தனது காரியம் சாதிக்க எந்த எல்லைக்கும் போவார்! இனி அவர் தனது தாய் நாட்டுக்குத் தான் போக வேண்டும்!

No comments:

Post a Comment