Wednesday 7 August 2019

மகாதிருக்கு ஆதரவு...!

சமீபத்தில் நடைப்பெற்ற,   டாக்டர் மகாதிர் தலைமை தாங்கும்,  பெர்சாத்துவின்  தலைவர்களின் கூட்டத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக " நாங்கள் பிரதமர் மகாதிருக்கு முழு ஆதரவை வழங்குவோம் என தலைவர்கள் ஏக மனதாக ஏற்றுக் கொண்டதாக!  விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக்  டிவிட் செய்துள்ளார்.

இதனை ஒரு நல்ல செய்தியாகவே நான் பார்க்கிறேன்.  மகாதிருக்கு ஆதரவு என்பது ஒன்றும் வேண்டாத செய்தி அல்ல. அனைத்து மலேசிய மக்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. இந்த நேரத்தில் இவர்களாக ஏன் எங்களின் ஆதரவை நாங்கள் தெரிவிக்கிறோம் என்கிறார்கள்?

பரவாயில்லை!  இந்த இரகசியக் கூட்டத்தின் மூலம் ஒரு முக்கிய செய்தி வெளியாயிருக்கிறது. அடுத்த பிரதமருக்கான செய்தி அது. 

இனி அடுத்த பிரதமர் யார் என்கிற கேள்வி பொதுவில் விவாதிக்கப்படாது என நம்பலாம்.  இது நாள் வரை பெர்சாத்து கட்சியில் உள்ளவர்கள் டக்க்டர் மகாதிரே பதவியில் தொடர வேண்டும் என்பதாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தார்கள்.   இப்படி அறிக்கை விடுபவர்களின் பின்னால்  யார் இவர்களை இயக்குகிறார்கள் என்கிற சந்தேகம் எல்லாம் நமக்கும் உண்டு. அது டாக்டர் மகாதிராகக் கூட இருக்கலாம்  என்றெல்லாம் ஓர் அனுமானமும் உண்டு. 

ஆனால் இந்த இரகசியக் கூட்டதின் மூலம் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்ததென நம்பலாம். இனி பெர்சாத்துவில் உள்ளவர்கள் அடுத்த பிரதமர் யார் என்கிற விவாதத்தில் இறங்கமாட்டார்கள். அப்படி அவர்கள் பிரதமர் டாக்டர் மகாதீரே பதவியில் நீடிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார்களானால் இதன் பின்னணியில் டாக்டர் மகாதீரே இருந்து இயக்குகிறார்  என்று தான் நாம் ஐயுற வேண்டி வரும். அவர் அப்படி செய்யமாட்டார் என நாம் தாராளமாக நம்பலாம்!

இனி பெர்சாத்து செய்ய வேண்டியதெல்லாம் அடுத்த பிரதமர் யார் என்பதல்ல! மக்களுக்கான சேவைக்குத்தான் முதலிடம் தர வேண்டும். அவர் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிமிடம் தனது பதவியை ஒப்படைக்கும் வரை மக்களுக்கான  சேவைகளில் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதே நமது அவா!

அது வரை நமது ஆதரவு மகாதிருக்குத் தான்!

No comments:

Post a Comment