Saturday 31 August 2019

தங்கம் வென்ற இளவேனிலி...!

தமிழ் நாடு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் உலகக் கிண்ண துப்பாக்கிச் சுடும் பட்டியில் தங்கம் வென்றிருக்கிறார்.

அவரது பெயர் இளவேனிலி. தந்தையின் பெயர் வாலறிவன். இவரது சகோதரரின் பெயர் இறைவன். இறைவனுக்கு 24 வயதாகிறது. இராணுவத்தில் பணி புரிகிறார். அவரும் முறையான பயிற்சி பெற்று துப்பாக்கி சுடுதலில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர். 

இளவேனிலிக்கு 19 வயது ஆகிறது. அவரது சகோதரர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட போது இளவேனிலிக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டதால்  அவரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடலானார்.  அப்போது அவர் ஏழாம் வகுப்பு மாணவி.  பின்னர் அவர் 12-ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றதால் அவருக்கு மருத்துவம் அல்லது இன் ஜினீயரிங் படிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தும் அதனை உதறித் தள்ளிவிட்டு துப்பாக்கிச் சுடுதலிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். இப்போது அவர் இளங்கலை படிப்பை படித்து வருகிறார்.

இளவேனிலி  உலக அளவில் பல பதக்கங்களைப் பெற்றவர். அடுத்து ஒலிம்பிக் போட்டியில் குறி வைத்திருக்கிறார். அதிலும் அவர் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமில்லை. 
 
இளவேனிலி தற்போது தனது பெற்றோருடன் குஜாராத் மாநிலத்தில் வசித்து வருகிறார். பெற்றோர்கள் குஜாராத்தில்; வேலையில் இருக்கிறார்கள்.

இதில் எனக்கு மிகவும் கவர்ந்த விஷயம் இரண்டு. ஒன்று இவர்களின் பெயர்: தத்தாவின் பெயர்: உருத்திராபதி  மகனின் பெயர்:  வாலறிவன்   பேத்தியின் பெயர்:  இளவேனிலி   பேரனின் பெயர்:  இறைவன். 

"தமிழன்டா!"  என்று பெருமை பட வைக்கிறது!

இப்படியெல்லாம் பெயர் வைத்தால் கூட உலகப் புகழ் பெற முடியும் என்பதை நிருபித்துக் காட்டியிருக்கிறார் இளவேனிலி.  கூகலின் சுந்தர் பிச்சை கூட நமது ஞாபகத்திற்கு வருகிறார்!

இரண்டாவது: படிப்பதற்கு நல்ல பல வாய்ப்புக்கள் இருந்தும் தனது மகளுக்காக அவைகளை விட்டுக் கொடுத்து அவரது துப்பாக்கி சூடும் போட்டிகளுக்கு அவரைத் தயார் செய்த பெற்றோர்கள், பாராட்டுக் குரியவர்கள்.

பிள்ளைகள் தாங்கள் விரும்பும் துறைகளைத் தேர்ந்தெடுத்தால் அதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள்.  அதற்கு சான்று: இளவேனிலி.

இப்போது அவர் உலக அளவில் தங்கம் வென்றிருந்தாலும் வரும் ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெறுவார் என நம்புகிறோம்! வாழ்த்துகிறோம்!

வாழ்த்துகள் இளவேனிலி!

No comments:

Post a Comment