Thursday 22 August 2019

இது தான் காரணமா...?

ஒன்றை நாம் புரிந்து கொண்டோம். பிரதமர் மகாதிர்  ஏன் இந்த அளவுக்குப் பிடிவாதம் காட்டுகிறார் என்பதை.

ஆமாம், இஸ்லாமிய சமயப் போகதர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என்பதில் அவர் காட்டுகின்ற அக்கறை நமக்குப் புரிகிறது.  எல்லாத் தரப்பு மலேசியர்கள் விரும்பினாலும் அவரால் அம்னோ கட்சியினரையும் பாஸ் கட்சியினரையும் ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அவர்கள் தான் ஜாகிர் நாயக்கை தூக்கிச் சுமப்பவர்கள்! 

நாமும் கூட அவரை வெறுக்கவில்லை.  எந்த நோக்கத்திற்காக அவர் இந்த நாட்டிற்குள் அடி எடுத்த வைத்தரோ அதை மட்டும் அவர் செய்ய வேண்டும். அதை விட்டு. "நான் இந்நாட்டுக் குடிமகன்!" என்று மார்தட்டிக் கொண்டு  அரசியல் பேச ஆரம்பித்தால் அதற்கான விளைவுகளை அவர் அனுபவிக்கத் தான் வேண்டும்.

ஜாகிர்  நாயக் ஓர் இஸ்லாமிய அறிஞர். அவர் இஸ்லாமிய சமயத்தைப்  ப்ற்றி பேசுவது தான் பொருத்தமாக இருக்கும். அவர் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்.  அவர் பேசுவது சரியா, தவறா என்பது பற்றி பிற மதத்தினர் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் அவரே பிற மதங்களைப் பற்றி விமர்சிக்கும் போது  அது தவறாகவே முடிய வாய்ப்புண்டு. அது தான் நடந்தது. 

இப்போது ஜாகிர் நாயக் பொது வெளிகளில் உரை நிகழ்த்த தடை செய்யப்பட்டிருக்கிறார். எல்லா மாநிலங்களும் அவரின் உரைக்கு கதவைடைத்து விட்டன.  இப்போது அவருக்குக் கைகொடுப்பவர்கள் கிளந்தான் மாநிலம் மட்டும் என்று சொன்னாலும் காவல்துறை அனுமதி தராது என்று நம்பலாம். 

பொது வெளிகளில் மட்டுமே அவருக்குக் கதவடைப்பு செய்யப்பட்டிருக்கின்றன.  ஆனால் உள்ளரங்கத்தில் தடை செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். இப்போதும் அவர் குடும்பத்தினர் சமய சொற்பொழிவுகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களோடு இவரும் சேர்ந்து கொள்ளலாம்.

ஆனாலும் ஜாகிர் நாயக் வழக்கம் போல மிகவும் ஆபத்தான மனிதர் என்பதில் ஐயமில்லை!  எங்காவது ஒரு சிறிய ஓட்டை இருந்தாலும் உள்ளே புகுந்து குழப்பத்தை ஏற்படுத்துவார்!

ஒன்று மட்டும் உறுதி. இனி சீனர்கள் பக்கம் அவர் திரும்ப மாட்டார்! இனி அவருடைய குறி இந்து- இந்தியர் என்னும் போக்கில் தான் போகும். அத்தோடு தீவிரவாதத்தை அவர் ஊக்குவிப்பவர். எத்தனை பேர் அவரின் தூண்டிலில் மாட்டுவர் என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது என்றாலும்  இது நடக்கும்!

யாருக்கோ பயந்து நாட்டை அழிவுப் பாதைக்கு இழுத்துச் செல்லும் ஒருவருக்கு அரசாங்கத்தோடு நாமும் சேர்ந்து பயப்படத்தான் வேண்டி இருக்கிறது!

No comments:

Post a Comment