Saturday 17 August 2019

இப்படி தரம் தாழ்ந்து...!

ஒரு வர்த்தக நிறுவனத்தின் நிறுவனரான, டான்ஸ்ரீ கூன் இயு இன்  நமது நாட்டின் இராணுவத்தினரைப் பற்றியான தனது கருத்தை  வலைத்தளத்தில்  பதிவேற்றம் செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க  ஒன்று. 

"டான்ஸ்ரீ"   போன்ற உயரிய  விருது பெற்ற ஒருவர் இப்படியெல்லாம் பேசுவது அந்த விருதுக்கே மரியாதை இல்லாமல் செய்து விடுகிறது.

அவர்: " இராணுவ வீரர்கள் செய்வதெல்லாம் தூங்குவதும் சாப்பிடுவதும் தான்! அதனால் என்னுடைய சிபாரிசு அவர்கள் தோட்ட்ங்களுக்கு வேலைக்கு அனுப்பப்பட வேண்டும்!" என்பது தான்.

ஒரு டான்ஸ்ரீ விருது பெற்ற ஒருவரின் பேச்சு இப்படி இருப்பது என்பது மன்னிக்கக் கூடியது அல்ல. இராணுவ வீரர்கள் இல்லாவிட்டால் ஒரு நாட்டுக்கு என்ன நேரும் என்பதை அவர் அறியவில்லையா அல்லது அறிந்து கொள்ள மறுக்கிறாரா?

ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளால் நாடு அமைந்தியிழந்த நிலையில் இருந்த போது இந்த நாட்டைக் காப்பாற்றியவர்கள் யார்? அன்று இதே இராணுவம் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து போராடவில்லை என்றால் இந்த நாட்டுக்கு அமைதி வந்திருக்குமா என்பதை அவர் யோசித்துப் பார்க்காமல் பேசியிருக்கிறார்.

இன்றைய நிலையில் டான்ஸ்ரீ கூன் ஒரு பெரிய தொழில் அதிபர்.  நாட்டில் அமைதி நிலவவில்லை என்றால் அவர் ஒரு தொழில் அதிபர் ஆகியிருக்க முடியுமா என்பதை அவர் யோசிக்க வேண்டும். இன்று நாட்டில் அமைதி நிலவுகிறது என்றால் அது இராணுவத்தினரின் வலிமையைக் காட்டுகிறது. 

ஆமாம். நமக்குத் தெரியாது என்பதால் எல்லாம் இயற்கையாகவே நடந்து கொண்டிருக்கிறது என்பது அர்த்தமல்ல. இராணுவம் என்பது, நாட்டின் பாதுகாப்பு என்பது அர்சாங்கத்தின் வேலை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை. இராணுவ வீரர்கள் எல்லாக் காலத்திலும் ஏதோ ஒரு எல்லையில் நாட்டின் பாதுகாப்புக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். 

தொழில் அதிபர் கூன் இயு இன் டான்ஸ்ரீ என்கிற விருதைப் பெற்றவர்.இப்படி அலட்சியமக பேசுவதை, எழுதுவதை தவிர்க்க வேண்டும். அந்த விருதுக்கு தகுதி உள்ளவர் என்பதை மெய்பிக்க வேண்டும்.

விருது பெற்றவர்கள் இப்படித் தரம் தாழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதே நமது வேண்டு கோள்!

No comments:

Post a Comment