Friday 16 August 2019

ஜாகிர் நாயக்கின் நோக்கம் என்ன?

நாட்டிற்குள் தஞ்சம் புகுந்த ஒருவர் இப்போது நாட்டில் உள்ளவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறார்!  

அவர் தான் ஜாகிர் நாயக், பிரபல இஸ்லாமிய சமயப் போதகர்!  நாம் அவரைப் பற்றி குறைத்து மதிப்பிடவில்லை.  அவருடைய சமய அறிவை யாரும் குறை சொல்லவில்லை.  ஆனால் மற்றவர்களுடைய சமய நம்பிக்கைகளைப் பற்றி எதையும் அறியாமல், அரைகுறையாக அறிந்து கொண்டு, மற்ற மதங்களைத் தாக்கிப் பேசுவது அறிவுடையவர்கள் செய்யும் காரியமல்ல.  அவருடைய அறிவு, நிபுணத்துவம் அனைத்தும் இஸ்லாமிய சமயம் மட்டுமே.  ஓர் இஸ்லாமிய அறிஞர் என்பதனால் அவருடைய குறிக்கோள் என்பது இஸ்லாமிய சமயமாகவே இருக்க வேண்டும்.அஅதற்கு அப்பால் போனால் அவர் காயம்படத்தான் நேரிடும்!

இப்போது சமயம் சாராத சில கருத்துக்களையும் அவர் உதித்திருக்கிறார். அதுவும் மலேசிய இந்தியர், சீனர்களைப்பற்றி அவர் சொன்னக் கருத்துக்கள் பொது மக்களிடையே கோபத்தைக் கிளறியிருக்கின்றன. மலேசிய இந்தியர்கள், மலேசியப் பிரதமரை விட இந்திய பிரதமர் மோடியை  அதிகம் விரும்புவதாக  அவர் கூறியிருக்கிறார்.  ஒரு வேளை மலேசிய இந்தியர்கள் அனைவரும் பிராமணர்கள் என்பதாக அவர் நினைத்திருக்கக் கூடும்! அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்!

 மலேசிய சீனர்களைப் பற்றி பேசும் போது "அவர்கள் இங்கு வந்த விருந்தாளிகள்! முதலில் நாட்டை விட்டு அவர்கள் போகட்டும்! அதன் பின்னர் நான் போகிறேன்!" என்பதாக அவர் அவர்களைச் சாடியிருக்கிறார்! 

ஆனால் இப்போது அவர் பேச்சுக்களைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. அடைக்கலம் புகுந்த நாட்டில் அவர் அமைதியாக வாழ வேண்டும்.  ஆனால் அவரோ ஆர்ப்பாட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்! மற்ற இனங்களைச் சீண்டிப் பார்க்கிறார்! அப்படியென்றால் என்ன அர்த்தம்?

ஆமாம்,  அவர் மீது என்ன குற்றச்சாட்டுக்கள் வந்தாலும் பரவாயில்லை, இங்கே சிறைக்குப் போனாலும் பரவாயில்லை, ஆனால் தன் தாய் நாடான இந்தியாவுக்குத் திரும்பக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்!  இங்கே சிறையில் இருந்தாலும் அது ராஜ வாழ்க்கை! அங்கே போனால் அது அராஜக வாழ்க்கை!  தீவிரவாதம் பேசுபவர்களுக்குத் தீவிரவாதம் தான் பதில்!

இங்குள்ளவர்கள் மீது வழக்குப் போட்டு,   தான் இங்கு தங்குவதற்கான நாள்களை இழுத்துப் போடுகிறார்! அது தான் அவரது நோக்கம்!

ஜாகிர், உங்கள் நோக்கம் நிறைவேராது!

No comments:

Post a Comment