நேற்று தமிழ் மலர் நாளிதழில் ":தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்கிற திருமதி சரஸ்வதி கந்தசாமியின் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. படித்ததே அதிர்ஷ்டம் என்று தான் சொல்லுவேன்.
இப்போது நடைமுறையில் இருக்கும், நாம் எழுதும் தமிழ் எழுத்து முறை, என்பது பெரியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதாகத் தொடந்து திராவிடக் கட்சிகள் நமது காதுகளில் ஓதிக் கொண்டே வந்திருக்கின்றன. அதாவது தமிழ் எழுத்துச் சீரமைப்பு என்பது கூட தமிழர்கள் செய்தது அல்ல எங்கள் "நாயக்கர்" செய்தது தான் என்று தமிழர்களை மட்டம் தட்டியே வந்திருக்கின்றனர்.
ஆனால் இந்த மாற்றத்திற்குக் காரணமானவர் சொ.முருகப்பா என்கிற தமிழறிஞர் என்பது இப்போது தான் புரிகிறது.
தமிழறிஞர் சொ.முருகப்பா காரைக்குடியைச் சேர்ந்தவர். 1930 களில் குமரன் என்கிற இதழை நடத்தி வந்தார். அந்த காலக்கட்டத்தில் தான் அவர் தமிழ் வரிவடிவங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி வாசகர்களின் கருத்தையும் கேட்டறிந்தார்.
சொ.முருகப்பா அறிமுகப்படுத்திய அந்த வரிவடிவங்களைத்தான் பின்னர் பெரியார் தனது குடியரசு, விடுதலை இதழ்களில் 1935 - ம் ஆண்டுக்குப் பின்னர் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.
அதன் பின்னர் பெரியார் நூற்றாண்டு விழாவில் தமிழக அரசு அந்த வரிவடிவங்களை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாற்றத்திற்குக் காரணமானவர் ஒரு தமிழர். இது நாள்வரை எந்த திராவிடக் கட்சியும் அவரது பெயரை உச்சரிப்பதே அவமானம் என்று ஒதுக்கிவிட்டு அது பெரியார் தமிழ் என்பதாகக் கூறி வந்தது.
இது தான் திராவிடம் என்பதை மறந்து விடாதீர்கள்! தமிழர்கள் எதையும் செய்ய இலாயக்கில்லாதவர்கள் என்று இன்றுவரை கூறிவருவது தான் திராவிடம்!
அவர்களைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடாதீர்கள்!
தமிழின் நவீன வரிவடிவத்தின் தந்தை என போற்றப்பட வேண்டிய தமிழறிஞர் சொ. முருகப்பா திராவிடக் கட்சிகளால் மறக்கடிக்கப்பட்டதற்கு ஒரே காரணம் அவர் ஒரு தமிழர்! அதனைத் தவிர வேறு காரணங்கள் இல்லை!
No comments:
Post a Comment