Thursday 18 February 2021

அம்மாடியோவ்! இது ஆபத்தல்லவா!

         

                                                           நன்றி: FMT News

ஊரடங்கு கட்டுப்பாட்டினால் மக்கள் எந்த அளவுக்குச் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.

அங்கே போகக் கூடாது இங்கே போகக்கூடாது, காரில் இருவர் தான் பயணம் செய்யணும், உணவகங்களில் ஒரு மேசையில் இருவர் மட்டுமே என்று இப்படி ஆயிரம் கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டால் மக்கள் என்ன தான் செய்வார்கள்? அதனால் விதிகளை மீறத்தான் செய்வார்கள்.

இன்னொரு கேள்வியும் உண்டு. இந்த விதிமுறைகளையெல்லாம் மக்கள் தான் கடைபிடிக்க வேண்டுமா ஆளும் அரசியல்வாதிகளுக்கில்லையா என்கிற கேள்வியும் உண்டு.  சட்டத்தை மீறுகிறவர்கள் இந்த அரசியல்வாதிகள் தான்.  அவர்களுக்கு மட்டும் சட்டவிதிகள் ஏன் தளர்த்தப்படுகின்றது என்று கேட்டாலும் ஆளும் தரப்பிலிருந்து பதிலில்லை!

இது பினாங்கு, செபராங் பிராய்யில் நடந்த நிகழ்வு.  ஒரு காரில் மூன்று பேர் பயணம் செய்ய முடியாது என்பதால் காரை ஓட்டி வந்த பெண்மணி தனது வளர்ப்பு  மகனின் நண்பனை காரின் முன்னே  உட்கார வைத்துவிட்டு தனது வளர்ப்பு மகனை காரின் பின்னே உள்ள  பொருட்கள் வைக்கும்  பகுதியில் (Boot)  ஒளித்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது!

இது தவறு தான். அந்த பயணம் சுமார் 10 நிமிடம் 15 நிமிடம் தானே அதனால் சமாளித்துவிடலாம் என்று அந்த பெண்மணி நினைத்திருக்கலாம். ஆனால் பயண நேரத்தை நம்மால் கணக்கிட முடியுமா! ஒரு சிறிய விபத்து பத்து  நிமிட பயணத்தை  ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ ஆக்கி விடும் என்பது தான் நமது அனுபவங்கள்! அப்படி நடக்கவில்லை! அதுவே அவர் செய்த புண்ணியம்!

நாம் சொல்ல வருவதெல்லாம் மக்களே! இது போன்ற ஆபத்தான விளையாட்டுக்கள் வேண்டாம். இது உயிர் சம்பந்தப்பட்டது. தப்பித்து விட்டால் மகிழ்ச்சி! தப்பிக்க முடியாவிட்டால் துன்பம், துயரம்! இது தேவை தானா என்பது இப்போது தெரியாவிட்டாலும் அனுபவிக்கும் போது தான் தெரியும்.

இது போன்ற ஆபத்தான விளையாட்டுகள் வேண்டாம்! ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்காது!

இதை விட நம்மால் வேறு என்ன சொல்லிவிட முடியும்!

No comments:

Post a Comment