Thursday 4 February 2021

சீனப் புத்தாண்டு வீட்டுக்குள்ளே!

இவ்வாண்டின் சீனப் புத்தாண்டு என்பது வீட்டுக்குள்ளே என்பது அரசாங்கம்  தெளிவு படுத்திவிட்டது!

உற்றார் உறவினர் குடும்பத்துடன் கோலாகலமாக வீட்டுக்குள்ளே கொண்டாட வேண்டியது தான்.  குறை சொல்லை ஒன்றுமில்லை. 

முதலில் நமது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும். அதை அலட்சியப்படுத்த முடியாது.

அரசாங்கம் விரைவில் கொண்டாட்டம் பற்றியான அறிவிப்புகளை வெளியிடலாம். இப்போதைக்கு மேலோட்டமான அறிவிப்பு இது.

நாட்டின் நலன் கருதி செய்யப்படுகின்ற ஏற்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மாற்றுக் கருத்து ஏதுமில்லை.

ஒரு சில கருத்துக்களை நாமும் முன் வைக்கிறோம்.

சீனப் புத்தாண்டு என்பது சீனர்களின் புத்தாண்டு.  நாம் அறிவோம். அதற்கு இரண்டு நாள்கள் விடுமுறை.  சனி, ஞாயிறு வேறு. ஆக இன்னும் இரண்டு மூன்று நாள்கள் இழுத்துக் கொண்டு போகும். நீண்ட விடுமுறை என்று சொல்லலாம்.

இந்த நீண்ட விடுமுறையில் சீனர்கள் பொதுவாக வீட்டிலேயே அடைந்து கிடக்க மாட்டார்கள் என்பது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் அதை விட மற்ற இனத்தவர்கள் - சீனர் அல்லதோர் - வீட்டில் அடைந்து கிடப்பார்களா என்பதும் கேள்விக்குறியே!

இப்போது அரசாங்கம் மிகவும் கடுமையான, பெருந்தொற்றின் காலத்தில், சட்ட திட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறது. எல்லாம் சரி தான். ஆனால் விடுமுறை காலங்களில் சீனர் அல்லாதாரின்  கிராமத்தை நோக்கிய படையெடுப்பை, எப்படி சமாளிக்கப் போகிறது?

அதனால் இப்படியும் யோசிக்கலாம்.  சீனர் அல்லாதார் வெளி மாநிலங்களுக்குச் செல்லத் தடை,  வெளியூர்களுக்குச் செல்லத் தடை,  வெளி நகரங்களுக்குச் செல்லத் தடை - என்று இப்படியும் யோசிக்கலாமே!

இப்படி இவர்களின் நடமாட்டத்தைக்  குறைத்தாலே தொற்றின் வேகம் குறையுமே! அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

சீனர்கள் தங்களது புத்தாண்டை வீட்டுக்குள்ளே கொண்டாடட்டும்.  அதே போல சீனர் அல்லாதார் வீட்டுக்கு வெளியே நடமாட்டத்தைக் குறைக்கட்டும்.

தொற்றை ஒழிக்க எல்லாருமே ஒத்துழைக்க வேண்டும். இது அனைத்து மலேசியர்களின் பொறுப்பு.

நோயை இப்போது நாம் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் வீட்டுக் காவல் போல் காவலில் நாம் தான் இருந்து கொண்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றால் அதற்கு நம் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

கொஞ்சம் யோசிப்போமா!


No comments:

Post a Comment