பினாங்கு மாநிலத்தில் உள்ள பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி சரியான ஒரு திட்டத்தை வகுத்து ஒரு மாணவருக்கு ஒரு கணினி என்கிற முறையைத் தொடங்கி உள்ளது!
நமக்கு அதுபற்றியான சரியான தகவல்கள் இல்லையென்றாலும் அவர்களின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அதனைச் சரியான வழியில் கொண்டு செல்ல "துணிப்பை திட்டம்" ஒன்றை ஆரம்பித்திருக்கிறது.
மீண்டும் சொல்லுகிறேன். அது ஒரு சரியான திட்டம் என்பதால் தான் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து அந்த திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
"நம் கையே நமக்கு உதவி" என்பது தான் இதன் பொருள். எல்லாமே ஒரு கூட்டு முயற்சி தான்.
எல்லாவற்றுக்கும் ஒரு வழி உண்டு. தேடினால் அந்த வழி நமக்குத் தெரியும். நாம் தேடுவதில்லை.
ஒரு சில பள்ளிகளில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. ஏழைப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அப்படி ஒன்றும் எளிதாக கணினி வாங்கி விட முடியாது.
அதுவும் இன்றைய சூழலில் பெற்றோர்கள் பல பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்கள். அதில் வேலையில்லா பிரச்சனை என்பது தலையாயது.
வயிற்றுப்பாட்டுக்கே பிரச்சனை என்னும் போது பிள்ளைகளின் கல்விக்காக கணினி வாங்கச் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்?
அவர்களின் "துணிப்பை திட்டம்" என்பது சரியான திட்டம் என்பதால் தான் பொது மக்களின் ஆதரவும் அவர்களுக்கு வெற்றிகரமாகக் கிடைத்திருக்கிறது.
நல்ல திட்டங்கள் போட்டு செயல்படும் போது பொது மக்கள் நிச்சயமாக ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
இந்த துணிப்பை திட்டத்தின் மூலம் எல்லா மாணவர்களும் - சுமார் 130 மாணவர்கள் - பயனடைகிறார்கள். அவர்களின் கணினி தேவை பூர்த்தியாகிறது. அதைவிட ஒரு பள்ளி என்ன செய்து விட முடியும்?
வாழ்த்துகிறோம்! பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம். இன்றைய நமது தேவை எல்லாம் இந்த கூட்டு முயற்சி தான்.
தலைமையாசிரியர் சங்க சின்னையா அவர்களை மனதாரப் பாராட்டுகிறோம்! தொடர்பு:(019-4494914)
ஒரு மாணவன் ஒரு கணினி!
No comments:
Post a Comment