கோவிட்-19 என்றாலே நமது உடனடி ஞாபகத்திற்கு வருபவர் சுகாதார தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் அப்துல்லா மட்டும் தான்!
இன்று நடக்கும் கொல்லைப்புற அரசியலில் உண்மையைப் பேசுபவர் அவர் மட்டும் தான் என்கிற நிலைமையும் அவர் உருவாக்கிவிட்டார்! மக்கள் மத்தியிலும் மனதில் நிலைத்து விட்டார்!
சமீபத்திய தனது டுவீட்டரில் அவர் தனது குடும்பத்தினருடன் நடைப்பயிற்சி மேற்கொள்வதையும் நடைப்பயிற்சி உடலுக்கு நனமைப் பயக்கும் என்பதையும் அந்த டூவீட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த டிவீட்டரில் நாம் பயன்படுத்தும், நம் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழி பலரின் கவனத்தை ஈர்த்தது. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கொடுத்து அதனைத் தமிழிலும் பதிவிட்டிருந்தார்.
நமக்குள்ள ஐயமெல்லாம் அம்னோ தரப்பு இதனை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்பது தான். பார்ப்போம்!
No comments:
Post a Comment