இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்புக்குழு ஒன்று அமைத்து, இந்தியர்களின் நிலையை உயர்த்த இந்த வாரம் புதன் கிழமை பிரதமர் தலைமையில் குழு ஒன்று அமைய விருப்பதாக ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார்.
பிரதமர் தலைமையில் பேசப்படும் அனைத்தும் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும் என்பதையும் அவர் நமது கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்.
இந்தியர் நலன், இந்தியர் முன்னேற்றம் என்பதில் இங்கு யாரும் ம.இ.கா.வுக்கு எதிரியல்ல என்பதில் முதலில் நாம் தெளிவு படுத்துகிறோம். எதிரி இந்தியர்கள் அல்ல ம.இ.கா. தான் என்பது இந்தியர் மனதில் ஆழப் பதிந்துவிட்டது! அதற்கானப் பொறுப்பை ம.இ.கா. தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பிரதமரைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் இந்தக் கூட்டத்தில் குழு ஒன்று ம.இ.கா.தலைமையில் தான் அமைக்கப்படும் என்பது சரியான அணுகுமுறையா என்பதும் நமது கேள்வி தான்.
ஏற்கனவே ஏகப்பட்ட இந்தியர் நலனுக்காக பிரதமருடனான கூட்டங்கள் நடைப்பெற்றிருக்கின்றன. அப்போது முன்னாள் தலைவர். இப்போது இந்நாள் தலைவர்! அப்போதும் எந்த முன்னேற்றத்தைக் காணவில்லை! இப்போது காணும் என்பது இந்நாள் தலைவரின் நம்பிக்கை!
தலைவர்கள் முன்னேற்றத்தைப் பற்றி நாம் பேசவில்லை. இந்தியர் நலனைப்பற்றி நாம் பேசுகிறோம். தலைவர்களும் இந்தியர்கள் தான்! ஆனால் அவர்கள் எட்டாத நிலையில் உள்ளவர்கள். அதனால் நம்மிடம் உள்ள முட்டாள்தனமான ஆலோசனையெல்லாம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்!
ம.இ.கா. மட்டும் குழு அமைத்து செயல்படும் என்றால் அதன் பலன் சுழியமாகத்தான் இருக்கும் என்பதை இப்போதே நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்! "எப்படியும் ஜெயிக்கப் போவதில்லை! இருப்பதை சுருட்டிக் கொள்வோம்!" என்கிற எண்ணம் தான் மேலோங்கி நிற்கும்!
"இல்லை! எங்களால் முடியும்!" என்று நீங்கள் - உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்குமானால் - ஒன்று செய்யுங்கள். இன்னும் 12 மாதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கும் உங்கள் சாதனைகளை இந்திய சமுதாயத்திற்கு அறிவியுங்கள். பல்லாண்டுகளாக இருந்த பிரதமர்களால் செய்ய முடியாததை வேடிக்கை பார்க்க வந்த இந்த பிரதமரால் செய்ய முடியும் என்றால் நமக்கு அதனால் எந்த ஆட்சேபணையும் இல்லை!
இந்த முறை உங்கள் சாதனைகளைச் சொல்லித்தான் இனி நீங்கள் உங்கள் அரசியலை நகர்த்த முடியும். ஏதோ டத்தோஸ்ரீ சரவணன் மேல் உள்ள அனுதாபத்தின் பேரில் தான் இந்த ஆலோசனையை நாம் கூறுகிறோம்.
இப்போது உங்கள் நேரம் நல்ல நேரம். அதனால் பதவியில் இருக்கிறீர்கள். அதனைத் தற்காத்துக் கொள்வது உங்கள் கையில்!
No comments:
Post a Comment