ஆளுங்கட்சியினர் யாரும் வாய் திறப்பதில்லை.! அனைவருக்கும் பங்கு உண்டு என்பதால் அவர்கள் மௌனம் காக்கின்றனர். எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றனர். அவர்களையும் நம்புவதாக இல்லை.
பொது அமைப்புக்கள் களத்தில் இறங்கியிருக்கின்றனர். காவல்துறை அவர்களைப் பயமுறுத்துகிறது! கைது செய்கிறது! விசாரணை என்று சொல்லி விபரீதமாக நடந்து கொள்கிறது!
"எங்களை யாரும் ஒன்றும் புடுங்க முடியாது!" என்று அரசியல்வாதிகள் தொடர்ந்து படு இறுக்கமாக ஆணிகளை அடித்துக் கொண்டிருக்கின்றனர்! அது நமக்குப் பட்டவர்த்தனமாகப் புரிகிறது! ஆனால் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை!
சமீபத்தில் மித்ரா அமைப்பில் ஊழல் என்று சொல்லி எத்தனையோ பேரை கைது செய்தனர். ஆனால் ஒருவர் பெயர் கூட வெளியாகவில்லை! அத்தனை இரகசியம்! இதில் எத்தனை பேர் ஆளுங்கட்சியில் அல்லது எதிர்க்கட்சியில் போட்டியிடுவார்களோ! அப்படியே தேர்தலில் வெற்றி பெற்றால் அவன் திருடன் என்பதெல்லாம் போய் அவன் யோக்கியனாகி விடுவான்! நாம் அவனை டத்தோ! இத்யாதி! இத்யாதி! அப்பப்பா! என்னமா நடிக்கிறார்கள்!
நாட்டில் நீதி, நியாயம் நாட்டு நலன், இன நலன், மொழி நலன் என்பதெல்லாம் போய் இப்போது பண நலன் என்பதில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது! பதவியில் இருக்கும் போதே கொள்ளையடித்து பிள்ளைகளை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பக்கம் விரட்டிவிட வேண்டும் என்பதைத்தான் ஒவ்வொரு அரசியல்வாதியின் கனவாக இருக்கிறது!
அப்படி என்றால் என்ன அர்த்தம்? இந்த நாட்டின் முன்னேற்றம் என்பதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை. தரமான கல்வி வேண்டும் என்பதை அவர்கள் விரும்பவில்லை. நாடு குட்டிச்சுவராகப் போனால் எனக்குக் கவலையில்லை; நான் சேர்த்து வைத்த பணம் ஏழு தலைமுறைக்கு வரும், 'அது போதும்'என்று நினைக்கிறார்கள்!
ஆனால் ஒன்றை மறந்து விட்டார்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சாபமும் ஏழு தலைமுறைக்குத் தொடரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.` நீங்கள் இருக்கும் போதே உங்கள் குடும்பங்கள் விளங்காமல் போகும் என்பதையும் மறந்து விடாதீர்கள்!
இலஞ்சம், ஊழல் என்று வரும்போது நமது நாடு பெருமைப்படும்படியாக ஒன்றும் இல்லை. உலக நாடுகள் வரிசையில் இன்னும் கீழே கீழே சரிந்து கொண்டு போகிறோம். அரசியல்வாதிகளுக்கு அது கேவலம் இல்லையென்றாலும் பொது மக்களுக்கு அது கேவலம் தான். திருடனுக்குத் தேள் கொட்டினால் கூட அதைத் தட்டிவிட்டு போய்க்கொண்டே இருப்பான்! அது தான் அரசியல்வாதி! மானம் ஈனமற்ற ஒரு ஜென்மம்!
நாட்டின் முதல் எதிரி என்றால் அது ஊழல் தான். அதுவும் இப்போது அது அசுர வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது! மக்களே! பொங்கி எழுங்கள் என்றால் அதுவும் குற்றமாகி விடுகிறது! முடிந்தவரை பொது அமைப்புகளுக்காவது நமது ஆதரவை கொடுப்போம்!
No comments:
Post a Comment