வருகிற ஜொகூர் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் கல்வி அமைச்சர், மஸ்லி மாலிக் போட்டியிடுகிறார் என்பது முக்கியம் அல்ல.
அவர் ஜொகூர் மாநில மந்திரி பெசார் வேட்பாளர் என்பது முக்கியமான செய்தியாக எடுத்துக் கொள்ளலாம். இது இன்னும் உறுதிப்படுத்தாத செய்தி என்று கூறப்படுகிறது.
பொதுவாகவே அம்னோ அரசியல் என்பது மக்களிடையே மிகவும் கேவலமான அரசியலாகக் கருதப்படுகிறது. நாம் எப்படி ம.இ.கா.வை அதன் ஊழக்காக வெறுக்கிறமோ அதே நிலை தான் அம்னோவுக்கும்! அம்னோ என்பது ம.இ.கா.வை விட பல பல படிகள் மேலே உள்ள ஊழல் கட்சி! ம.இ.கா. வினரின் ஊழல் குரு என்றால் அது அம்னோ தான்!
ஆக, அம்னோவின் சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்கள் ஊழலிலிருந்து தப்பிவிட முடியாது! மக்களுக்கு மிகவும் தெரிந்த விஷயம் இது.
அதனால் மஸ்லி மாலிக் போன்றவர்கள் உள்ளே வரும் போது அதுவும் மந்திரி பெசாராக வருவதற்கான வாய்ப்புக் கிடைத்தால் அதுவே ஜொகூர் மாநிலத்திற்குக் கிடைத்த பெரும் பேறு என்று சொல்லலாம்.
மஸ்லி மாலிக் நல்ல கல்வியாளர். படித்த்வர், பண்புள்ளவர். இலஞ்ச, ஊழலை வெறுப்பவர். நேர்மையாளர்.
சமீபத்தில் அரசியலுக்கு வந்தவர். யாரும் குறை சொல்ல முடியாத பண்பாளர்.
இந்தப் பண்புகள் ஒன்றே போதும் ஜொகூர் மாநிலத்தை வழிநடத்த. இலஞ்சம் ஊழல் புரியும் அரசியல்வாதிகளால் மக்கள் தான் அவதிப்பட வேண்டி வரும். அது தான் நடந்து கொண்டிருக்கிறது! நமக்கு இதெல்லாம் தெரியாமலா போகும்!
தெரிந்தும் மீண்டும் மீண்டும் அதே தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். இந்த ஊழல் பேர்வழிகளால் என்ன தான் நடக்கிறது? கோயில்களை உடைக்கிறார்கள், தமிழ்ப்பள்ளிகளுக்குத் தடையாக இருக்கிறார்கள், குடியுரிமைத் தொடர்பில் குளறுபடி செய்கிறார்கள் ஏன் இப்போது பிறப்புப் பத்திரத்திலும் இழுத்தடிக்கிறார்கள்!
நல்ல அரசாங்கம் அமையும்வரை இதெல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கும்!
மஸ்லி மாலிக் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் நமக்கு, மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
மஸ்லி மாலிக் ஜொகூர் மந்திரி பெசாராக வர வேண்டும். அதுவே நமது எதிர்பார்ப்பு!
No comments:
Post a Comment