Sunday 16 January 2022

இருபது ஆண்டுகள் வயிற்றில் சுமந்த பெண்!

                            Bangladesh Woman Spent 20 Years with Scissors in her Stomach

ஏழை எளிய, நடுத்தர பெண்கள் என்றால் உலகத்தில் என்ன நடக்கும் என்றே கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை!

வங்காள தேசத்தில் பாச்சினா என்கிற 55 வயது  பெண்மணி  ஒருவர் சுமார் இருபது ஆண்டுகள் தனது வயிற்றில் கத்திரிக்கோல் ஒன்றை சுமந்து வந்திருக்கிறார்!  வயிற்றில் வலி இல்லை என்றால் இன்னும் கூட இருபது ஆண்டுகள் அவர் அதனைச் சுமந்து வந்திருக்கலாம். ஆனால், ஒரு கட்டத்தில்,  வயிற்றின் வலியை அவரால் தாங்க முடியவில்லை. 

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சிறுநீரக அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடியால் அவரது வயிற்றில் கத்திரிக்கோல் ஒன்று அகப்பட்டுக் கொண்டது! ஒரு பெண் டாக்டர் அந்த கைங்கரியத்தைச் செய்திருக்கிறார்! அந்த அளவுக்கு அவருக்கு அலட்சியமோ என்னவோ அல்லது என்ன மனநிலையில் அவர் இருந்தாரோ!

அந்தப் பெண்மணி அறுவை சிகிச்சை நடந்த அதே கிளினிக்கில்  தனக்கு தாங்க முடியாத வயிற்று வலி தொடர்வதாகக் கூறியும் அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இதெல்லாம் சகஜம் என்று கூறி மருந்துகளைத் தாரளமாக அள்ளிக் கொடுத்திருக்கின்றனர்!

இனி மேல் இந்த வேதனையைத் தாங்குவதாக இல்லை என்று வேறு ஒரு கிளினிக்கில் தனது சோகக் கதையைக் கூறியிருக்கிறார். அங்கு அவர்கள் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்ததில்  வயிற்றினுள்  கத்திரிக்கோல் இருந்ததைப் பார்த்திருக்கின்றனர்! கத்திரிக்கோல் வெளியே எடுக்கப்பட்டதும் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.

நம்மிடம் ஒரு கேள்வி உண்டு. வேறு ஒரு கிளினிக்கில்  சென்று பார்த்த  போது  அவர்கள் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தனர். இதனை ஏன் இதற்கு மூன்னாள் அறுவை சிகிச்சை செய்த அந்த கிளினிக் அதனைச் செய்யவில்லை?  எக்ஸ் ரே தானே!அறுவை சிகிச்சை அல்லவே!

இதில் ஏதோ சூது இருப்பதாகவே  நமக்குத் தோன்றுகிறது. அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடியும்.  அது நல்லதாகவும் இருக்கலாம்! கெடுதலாகவும் இருக்கலாம். ஆனால் அதைவிட அவர்கள் பணத்தையே குறியாக கொண்டிருக்கின்றனர் என்பது தான் சோகம்!

நம்மால் அனுதாபங்களைத்தான் சொல்ல முடியும்! வேறு என்ன செய்ய? 

No comments:

Post a Comment