Tuesday 4 August 2020

அடுத்த கட்டத்துக்கு தயாராக வேண்டும்!

அம்னோ,,  அடுத்த கட்டத்துக்குத் தயாராக வேண்டும்!

இது தான் கைரி ஜமாலுடின், ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர்,  அம்னோவினருக்கு விடுத்திருக்கும் செய்தி.

உண்மை தான்.  அவர் விடுத்திருக்கும் செய்தியில் உண்மை உண்டு. அம்னோ நீண்ட பாரம்பரியம் உள்ள கட்சி.  நீண்ட நாள் ஆட்சியில் இருந்த கட்சி.

முன்னாள் தலைவர்களின் ஆட்சியில் சில குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஆனாலும் மக்களைப் பெரிய அளவில் பாதிக்கின்ற குறைபாடுகள் இருந்ததில்லை.

அளவுக்கு அதிகமான குறைபாடுகள், பெரிய குறைபாடுகள் என்றால் அந்தப் பெருமை நஜிப் ரசாக்கையே சாரும்.! அத்தோடு  அகமது சாகிட் ஹமீத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.  இப்போதைக்கு இந்தத் தலைவர்கள் தான் கண்ணுக்குப் பளிச் என்று தெரிபவர்கள். காரணம் விசாரணை இன்னும் மூடிந்த பாடில்லை!

ஆனால் அத்தோடு முடிந்துவிடவில்ல.  அம்னோ அரசியலில் உள்ளவர்கள் அனைவருக்கும்  பலர் மீது பல வழக்குகள் உண்டு.  அவர்கள் எல்லாம் இப்போது அசைக்க முடியாத தலைவர்களாக இருக்கிறார்கள்.! தொடர்ந்து இருந்தால், அவர்களே மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், தங்களை யாரும் அசைக்க முடியாது  என்று நம்புகிறார்கள்!

அப்படித்தான் நஜிப் ரசாக் நினைத்தார்.  ஆனால் சில மாதங்களே ஆட்சிக்கு வந்து கவிழ்க்கப்பட்ட பக்காத்தான் அரசாங்கம் அவரைக் குற்றவாளி என்று கூறி அவரைக் கூண்டில் நிறுத்தியது! அவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.  இப்போதைக்கு மாதம் இரு முறை காவல்துறைக்குச் சென்று கையொப்பமிட்டு வருகிறார்!

ஆனால் மக்களின் மனநிலையை யாரும் கணித்துவிட முடியாது.  இப்படித்தான் இருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. மக்கள் எல்லாக் காலங்களிலும், கிராமத்து மக்களாக இருந்தாலும் சரி,  என்னவோ இவர்களைத்தான் ஆதரிப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

குறிப்பாக ஊழலில் சம்பந்தப்பட்ட அம்னோ தலவர்கள் நஜிப் ரசாக், அகமது சாகிட்டை ஆதரிப்போம் என்று தொடர்ந்து கூறி வந்தார்களானால் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்று தான் நாம் சொல்ல முடியும்!

அம்னோ, அடுத்த கட்டத்துக்குத் தயாராக வேண்டும் என்பது உண்மை தான். ஏதோ மக்களிடையே நல்ல பெயர் உள்ளவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தான் இனி கட்சியைத் தொடர்ந்து வழி நடத்த வேண்டும்.

கைரி ஜமாலுதீன்  சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்!

No comments:

Post a Comment